ராம நவமி நிகழ்ச்சிகளை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு
லக்னோ, மார்ச் 28- - உத்தரப்பிரதேசத்தில் ராம நவமி போன்ற இந்துமத நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர்களே முன்னின்று நடத்துமாறு உத்தரவு பிறப்பித்து, அம்மாநில சாமியார் முதல்வர் ஆதித்ய நாத் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக, உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் 75 மாவட்டங்க ளின் ஆட்சியர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், ராமநவமி, அஷ்டமி முன்னிட்டு மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளார். தீபாவளி கொண்டாடுவது, கார்த்திகை தீபம் ஏற்றுவது என்று உ.பி. பாஜக அரசு முழுக்க முழுக்க குறிப்பிட்ட மதம் சார்ந்தே இயங்கிக் கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில்தான், ராமநவமி போன்ற மத நிகழ்ச்சிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் அரசு பணம் ஒதுக் கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்ட ஆட்சியர் கள், எந்த கோவிலில் யாரை வைத்து நிகழ்ச்சி நடத்துவது என முடிவு செய்யக் கூடிய வேலைகளில் ஈடுபடுவார்கள். இதற் காக அரசு அதிகாரிகள் குழுவும் அமைக்கப் பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ரூ.2,753 கோடியில் அரசு பாலிடெக்னிக் தரம் உயர்கிறது
சென்னை, மார்ச் 28- தமிழ்நாட்டில் ரூ.2753 கோடியில் 54 அரசுப் பாலிடெக்னிக் (பலவகை தொழில்நுட்ப) கல்லூரிகள் தரம் உயர்த் தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த கேள்வி நேரத்தின்போது, வானூர் தொகுதி அதிமுக உறுப்பி னர் சக்கரபாணி பேசும்போது, “வானூர் ஒன்றியத்தில் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி தொடங்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,“ விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி களுக்கு அனுமதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 519 இடங்களில் 50 விழுக்காடு மட்டுமே நிரப்பப்பட்டன. மீதமுள்ள 50 விழுக்காடு இடங்கள் காலியாக உள்ளன. எனவே, தான் மாணவர்களின் சேர்க்கையை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகள் ரூ.1000 பெறுவதால் இந்த ஆண்டில் 10 ஆயிரத்து 500 மாணவி கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள். தொழில் துறை 4.0 தரத்திற்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை திறன் மிகு மையங்க ளாக மாற்றும் திட்டத்தை வரும் ஆண்டில் செயல்படுத்த உள்ளோம். குறிப்பாக 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் 2 ஆயிரத்து 753 கோடியில் திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளது”என்றார்.
நூலகங்களில் வைஃபை வசதி
சென்னை,மார்ச் 28- போட்டி தேர்வு எழுதும் மாணவர் களுக்காக நூலகங்களில் வைஃபை வசதி அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது, அந்தியூர் பகுதியிலுள்ள நூலகத்தில் வைஃபை வசதி ஏற்படுத்தித்தரப்படுமா? எனவும், கம்பம் தொகுதியில் உள்ள நூலகங்கள் சிதிலமடைந்துள்ளதால் அதனைப் புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று சட்டமன்ற உறுப்பி னர்கள் கே.ஜி வெங்கடாசலம் மற்றும் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் துணை கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்காக அரசு நூலகங்களில் கடந்த ஜனவரி முதல் முதற்கட்டமாக 500 நூல கங்களில் வைஃபை வசதி அமைக்கப் பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக அனைத்து அரசு நூலகங்களுக்கு வைஃபை வசதிகள் அமைக்கப்படும்” என்றார். சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியி லிருந்து சிதிலமடைந்த புதிய நூலகம் அமைப்பதற்கு முதலமைச்சருடன் கலந்தாலோசித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம்
சென்னை, மார்ச் 28- 30 லட்சம் பேர் வரை வந்து செல்லும் திருவண்ணாமலையில் புதிதாக பேருந்து நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித் தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாயன்று (மார்ச்28) நடை பெற்ற கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி களுக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பதில் அளித்தார். அப்போது, மதுராந்தகம் நகரப் பேருந்து நிலையம் 1992 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 25 பேருந்து கள் நிறுத்தக்கூடிய அளவிற்கு கட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கு 10 பேருந்துகள் மட்டுமே வந்து செல்கின்றன. எனவே, புதிய பேருந்து நிலையம் அமைப்ப தற்கு பதிலாக மக்களின் வசதிக்காக நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் 184 பேருந்து நிலை யங்கள் மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ளது. இதில் 203 பேருந்து நிலையங்கள் பேரூராட்சி, ஊராட்சி பகுதியில் உள்ளது. தற்போது 117 பேருந்து நிலை யங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையமே இல்லாத கீழ்பெண்ணாத்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைத்து கொடுக்கப்படும். கோவில் நகரமான கும்ப கோணத்தில் புதிய பேருந்து நிலை யம் அமைக்க இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் முன்னுரிமை அடிப்படையில் இந்த ஆண்டே பேருந்து நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும். திருவண்ணாமலைக்கு ஒவ் வொரு நாளும் 30 லட்சம் பேர் வரை வந்து செல்கின்றனர். எனவே, அங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கப் படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித் தார்.
ரூ.26,353 கோடிக்கான இறுதி துணை மதிப்பீடு தாக்கல்
சென்னை, மார்ச் 28- தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை செவ்வா யன்று (மார்ச் 28) நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில், “2022-23 ஆம் ஆண்டிற் கான முதல் துணை மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் “புதுப் பணிகள்” மற்றும் புது துணைப் பணிகளுக்கான செலவினங்களுக்கு பேரவையின் ஒப்புதல் பெறுவது முக்கிய நோக்கம்”என்றார். “நகைக் கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடியும் அரசு போக்குவரத் துக் கழக ஓய்வுபெற்ற மாநிலப் போக்குவரத்து கழக ஊழியர்களுக் கான ஓய்வுக்கால பலன்களுக்காக ரூ.1,032 கோடியும், ஒருங்கிணைந்த நகர்ப்புர மேம்பாட்டு இயக்கம் மற்றும் சென்னை பெருநகர மேம் பாட்டு இயக்கம் ஆகியவற்றின் நிலுவைச் செலவினங்களுக்கான ரூ.1,393.38 கோடியும் வழங்கப்பட் டுள்ளது” என்றார். இந்த துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.26,353 கோடி நிதி ஒதுக்கத்திற்கு வகை செய்கின்றன. இதில் ரூ.19,777 கோடி வருவாய் கணக்கிலும் ரூ.3,642.26 கோடி மூல தனக் கணக்கிலும் ரூ.2,934.23 கோடி கடன் கணக்கிலும் அடங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ சின்னதுரை,“ஓய்வுபெற்ற போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு 90 மாதமாக வழங்கப்படாமல் உள்ள பஞ்சப்படி உள்ளிட்ட அனைத்து நிலு வைத் தொகைகளையும் உடனடி யாக வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
சொத்து வரி: சென்னை மாநகராட்சி சலுகை
சென்னை, மார்ச் 28 - 5 ஆண்டுகளுக்கு மேல் சொத்து வரி செலுத்தாத வர்களுக்கு புதிய சலு கையை மாநகராட்சி அறிவித்துள்ளது. மாநகராட்சி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக 245.31 கோடி ரூபாய் வரி நிலுவையை வசூலிக்க முடி யாமல் உள்ளது. இதில், நீதிமன்ற வழக்கு காரண மாக 90.68 ரூபாயும், நீண்ட காலமாக பூட்டி கிடக்கும் சொத்து உரிமையாளர்க ளிடம் இருந்து 33.56 கோடி ரூபாயும் என 124.24 கோடி ரூபாய் வசூலிக்க முடியாமல் உள்ளது. எனவே, 5 ஆண்டு களுக்கு மேலாக சொத்து வரி நிலுவையில் வைத்துள் ளவர்கள் 3 மாதம் காலத்தில் தொகையை செலுத்தினால், 20 விழுக்காடு சலுகை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான தீர்மானம் செவ்வாயன்று (மார்ச்.28) நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்க அணுமின் உலையில் கசிவு
வாஷிங்டன், மார்ச் 28- அமெரிக்காவின் மின்னெசோட்டா மாகாணத்தில் உள்ள அணுமின் உலையில் கசிவு ஏற்பட்டதால் அதன் இயக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்த கசிவு குறித்துக் கருத்து தெரி வித்துள்ள உலை நிறுவனமான எக்செல் எனர்ஜி, “கசிந்த தண்ணீர் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலை வளாகத்தைத் தாண்டி அந்த நீர் வெளி யில் எங்கும் செல்லவில்லை. தேவை யான சரி செய்யும் வேலைகளைச் செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறோம். கசிந்துள்ள நீரை நிரந்தரமாகக் கட்டுப்படுத்துவதற்கான வேலையைத் துரிதப்படுத்துகிறோம்” என்று தெரி வித்துள்ளது. மின்னெசோட்டா மாகாணத்தில் உள்ள இந்த மாண்டிசெல்லோ அணுமின்சக்தி உற்பத்தி ஆலையில் இந்த கசிவு ஏற்பட்டதைக் கடந்த மாதத்தில் அறிவித்த னர். கதிரியக்கம் கொண்ட சுமார் 15 லட்சம் லிட்டர் வெளியேறியதை ஒழுங்குபடுத்தும் ஆணைய அதிகாரிகள் கண்டுபிடித்திருக் கிறார்கள். இதில் டிரிடியம் கலந்திருந்த தையும் அவர்கள் சோதனைகள் மூலம் கண்டுபிடித்தனர். அணுஉலைகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்போது அதோடு சேர்ந்து உற்பத்தியாகும் துணைப்பொருள் டிரி டியம் என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 2022இல் இந்தக் கசிவு ஏற்பட்டிருக்கிறது. நிறுவனமும், மாகாண நிர்வாகமும் இது குறித்து வெளியில் தெரிவிக்கவில்லை. நான்கு மாதங்களுக்குப் பிறகு தற்போது தான் மக்களுக்கு தெரிய வந்துள்ளது. மீண்டும் உலையை இயக்குவது குறித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை.