states

img

5 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளி ஆசிரியர்

லக்னோ பாஜக ஆளும் உத் தரப்பிரதேச மாநி லத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலி யல் வன்முறை குற்றங்கள் மிக மோசமான அளவில் அதிக ரித்து வருகிறது. மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் இல்லாத நாட்களே இல்லாத நிலைமை உள்ளது. ஆனால் உத்தரப்பிர தேச பாஜக முதல்வர் பாலியல் குற்றங்களை ஆதரிப்பது போல அமைதியாக இருக்கி றார். இந்நிலையில், லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் விழிப்புணர்வு கல்வி மூலம்  ஒன்றாம் வகுப்பு முதல்  மூன்றாம் வகுப்பு மாணவிக ளுக்கு, அதே பள்ளியின் ஆசி ரியர் பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் வெளிச் சத்திற்கு வந்துள்ளது.  சமீபத்தில் பாலியல் வன் முறை தொடர்பாக அதே பள்ளி ஆசிரியர் ஒருவர் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு மாணவிகளுக்கு “நல்ல தொடுதல் எது?, கெட்ட தொடுதல் எது?” என் பதை செயல் மூலமாக பாடம் நடத்தியுள்ளார். இந்த கல்வி நிறைவு பெற்றப் பின், பாடம் நடத்திய வகுப்பில் இருந்த பெரும்பாலான மாண விகள் (5 முதல் 7 வயது வரை யிலான சிறுமிகள்),”இதே போன்று கெட்ட தொடுதல் மூலம் எங்களை ஆசிரியர் ஒரு வர் துன்புறுத்தினார்” எனக் கூறியுள்ளனர்.  இதனையடுத்து பாலி யல் கல்வி பாடம் நடத்திய ஆசி ரியர் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது பள்ளி நிர்வா கம் மற்றும் கல்வித்துறை அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. மேலும் இந்த விவகா ரம் சிறுமிகளின் பெற்றோர் மற்றும் கிராம மக்களுக்கு தெரி யவர, மாணவர்கள், கிராம  மக்கள் இணைத்து போராட்டம் நடத்தினர். இந்த போராட் டத்தைத் தொடர்ந்து கிராம  தலைவர் ரூப் சிங் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமி களிடம் பாலியல் சீண்டலில் ஈடு பட்ட ஆசிரியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாக செய்திகள் வெளி யாகியுள்ளன.