சென்னை, ஜூன் 5- அண்ணாமலை அறிவுப் பூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன் என்று அமைச்சர் மா.சுப்பிர மணியன் கிண்டல் செய்துள்ளார். தாய் - சேய் நல ஊட்டச் சத்து பெட்டகத்தில் அரசின் நிர்ப்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்ட தாலும், தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திர வம் கொள்முதல் செய்ததா லும் தமிழக அரசுக்கு ரூ.77 கோடி நஷ்டம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை தெரிவித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் சுப்பிரமணியன், “அண்ணா மலை அறிவுப்பூர்வமாக குற் றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன். ஆனால் ஆதா ரம் இல்லாமல் பேசுகிறார். டெண்டர் ஓபன் செய்வதற்கு முன்பாகவே அதில் முறை கேடு நடைபெற்று உள்ளது என யூகங்களின் அடிப்படை யில் பேசி வருகிறார். முறை கேடு நடந்து இருந்தால் அதனை அவர் நிரூபிக்க வேண்டும். டெண்டர் பணிகள் முடிவடை யும் முன்பாக ஊழல் நடை பெற்று உள்ளது, நஷ்டம் ஏற் பட்டு உள்ளது என கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. 2 நாட்களுக்கு பின்னரே அந்த டெண்டர் ஓபன் செய்யப் படவுள்ளது. தவறு நடை பெற்று உள்ளது என நிரூ பித்தால் நிச்சயம் நடவ டிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.