states

கோரிக்கைகளுக்காக பட்டினிப் போராட்டம் சத்துணவு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத்தீர்வு காண்க!

சென்னை, ஜூன் 27-  பட்டினிப் போராட்டம் நடத்தும் சத்துணவு ஊழியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: சத்துணவு ஊழியர்களுக்கு வரை யறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்  கிட வேண்டும். தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியத்தை ரூ.9  ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.  பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்கிட வேண்டும். ஐம்பதாயிரத்திற்கும் மேற் பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். காலை சிற்றுண்டித் திட் டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்கிட வேண்டும். விலைவாசி உயர்  விற்கேற்ப மதிய உணவிற்கு வழங்கப்  படும் மானியத்தொகையை உயர்த்தி  வழங்கிட வேண்டும். சமையல் எரிவாயு  சிலிண்டருக்கு ரூ.1200- வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சென்னையில் சத்து ணவு ஊழியர்கள் ஜூன் 26 முதல் பட்டி னிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  சத்துணவு ஊழியர்களை முறையாக அரசு அதிகாரிகள் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணாததால் போராட்டம் இன்றும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இதனால் நேற்றிலி ருந்து உணவு அருந்தாமல் போராட்டத்  தில் ஈடுபட்டு வந்த 15 பெண்களுக்கு மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நியாயமான கோரிக்கை களை வலியுறுத்தி போராடும் சத்துணவு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை தமிழ்நாடு அரசு உடனடியாக அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களது கோரிக்  கைகளுக்கு சுமூகத் தீர்வு காண வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.