சண்டிகர், பிப். 11 - ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை களில் பணிபுரியும் மருத்து வர்கள் மற்றும் பணியா ளர்களுக்கு உடைக் கட்டுப் பாடுகளை விதித்து அம் மாநில பாஜக அரசு உத்தர விட்டுள்ளது. இதுதொடர்பாக பிப்ர வரி 9 அன்று அறிவிக்கை வெளியிட்டுள்ள ஹரி யானா அரசு உடைக் கட்டுப் பாட்டைப் பின்பற்றாத எவ ரும் கடமையில் ஈடுபடாத வர்களாக (விடுப்பு நாளாக) கருதப்பட்டு கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத் தப்படுவார்கள் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஹரியானா அரசின் உத்தரவானது, டெனிம் ஜீன்ஸ், பலாசோ பேண்ட், பேக்லெஸ் டாப்ஸ் மற்றும் பாவாடை அணிய தடை விதிக் கிறது. பெண் மருத்துவர்கள் மேக்கப் அல்லது அதிக நகைகளை அணிய கூடாது என்றும், ஆண்கள் தங்கள் சட்டை காலர்களை விட நீளமாக முடியை வளர்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பெண் மருத்துவர்கள் நகங்களை நீளமாக வளர்ப்ப தையும் இந்த உத்தரவு கட்டுப்படுத்துகிறது. இந்த உடைக் கட்டுப் பாடு, பாதுகாப்பு ஊழி யர்கள், வாகன ஓட்டுநர்கள், துப்புரவு ஊழியர்கள் மற்றும் சமையலறைகளில் பணிபுரியும் ஊழியர் களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.