சென்னை, ஏப்.19- தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மே மாதம் நடைபெற வுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு புதனன்று ஹால் டிக்கெட் வெளியாகிறது. பிற்பகல் 2 மணி முதல் http://dge.tn.gov.in இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும் 27 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ள செய்முறைத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் கட்டா யம் எனவும் மே 2022 பொதுத்தேர் விற்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வு கள் இயக்ககம் தெரிவித்துள்ளது.