states

காஷ்மீரில் சிறுபான்மை இந்துக்களை பாதுகாப்பதில் அரசாங்கம் தோல்வி!

புதுதில்லி, ஜூன் 11- ஜம்மு - காஷ்மீரில் அதிகரித்துவரும் சட்ட விரோத படுகொலைகள், சிறுபான்மை இந்துக்  களை பாதுகாப்பதில், இந்திய அரசாங்கம் தோல்வி அடைந்திருப்பதையே காட்டுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்’ கூறியுள்ளது. “ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகே வன்முறைச் சம்பவங்கள் பெருகி இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ‘ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்’, அதற்கான காரணத்தை ஆராய்வதுடன், ஆயுதம் ஏந்திய குழுக்களால் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பாக, விரைவான, சுதந்  திரமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்  டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகி ஆகார் பட்டேல் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: “காஷ்மீர் மக்களின் பாதுகாப்பிற்காக இந்திய அதிகாரிகள் அவசர நடவடிக்கை களை எடுக்க வேண்டும். பல தசாப்தங்களாக, ஜம்மு & காஷ்மீர் மக்கள், மனித உரிமை  மீறல்களாலும், அதிகார துஷ்பிரயோகங்களா லும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு & காஷ்மீர்  மக்களின் மனித உரிமைகள் இந்திய அதிகாரி களால் புறக்கணிக்கப்பட்ட ஒன்றாகவே உள் ளது. 

2022-ஆம் ஆண்டில் இதுவரை மட்டும் 19 பேர்  காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் இந்து சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த வர்கள். மேலும் இவர்கள் பள்ளி ஆசிரியர், கடைக்காரர், அரசு ஊழியர்கள் மற்றும் ஒரு சாதாரண தினசரி தொழிலாளி என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  இந்திய அரசாங்கத்தால், ஜம்மு & காஷ்மீ ரின் சிறப்பு சுயாட்சி உரிமை ஒருதலைப்பட்ச மாக பறிக்கப்பட்ட 2019 ஆகஸ்ட் 5 முதல் நவம்பர்  2021-வரையிலான காலத்தில் மட்டும், ஜம்மு & காஷ்மீரில் ஆயுதக் குழுக்களால் 87 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  2019 முதல், இந்திய அதிகாரிகள் காஷ்மீர்  மக்களுக்கு எதிராக ‘பயங்கரவாத எதிர்ப்பு’ நட வடிக்கை என்பதன் பெயரில் கூட்டுத் தண்டனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்திய அதிகாரிகள், இந்தியாவின் முதன்மையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ், பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் உட்பட பல மனித உரிமைப் பாதுகாவலர்களை கைது செய்துள்ளனர். குறைந்தது 36 ஊடக வியலாளர்கள் இதுவரை தங்கள் அறிக்கைக் காக விசாரணை, சோதனை, அச்சுறுத்தல்கள் அல்லது உடல்ரீதியான தாக்குதல்களை எதிர் கொண்டுள்ளனர்.  ‘அக்சஸ் நவ்’ அமைப்பின் தரவுகளின்படி, ஜம்மு & காஷ்மீர் மக்கள், 2021-ஆம் ஆண்டில்  குறைந்தது 85 இணைய முடக்கங்களை எதிர்  கொண்டனர். இது உலகின் மிக அதிகமான ஒன்றாகும். இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி நீண்ட காலத்திற்கு இணைய முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ‘பயங்கரவாத எதிர்ப்பு’ நடவடிக்கை என்ற பெயரில் இவை நடந்தன.

அதைத்தொடர்ந்து, ஜம்மு & காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமையில் குறிப்பிடத்தக்க முன்  னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள்  கூறினாலும், ஆயுதப்படை (சிறப்பு அதிகார)  சட்டம் இப்போதும் இருக்கிறது. பொதுமக்க ளைப் பாதுகாப்பது, தேசியப் பாதுகாப்பை நிலைநிறுத்துவது மற்றும் ஆயுதக் குழுக்களின் வன்முறையை எதிர்த்துப் போராடுவது ஆகிவற்றையே ஆயுதக்குழுக்களின் பணி களாக ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்)  சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. நடைமுறையிலோ பாதுகாப்புப் படை வீரர்கள் வரலாற்று ரீதியாக பல கடுமையான மனித உரிமை மீறல்களைச் செய்துள்ளனர். சித்ர வதை, பாலியல் வல்லுறவு மற்றும் சட்டத்திற்குப்  புறம்பான மரண தண்டனைகள் உள்ளிட்ட வற்றை பொதுமக்களுக்கு எதிராக அரங்கேற்றி யுள்ளனர்.  ஆனால், அந்தக் குற்றங்கள் எல்லாம் தண்  டிக்கப்படாமல் போய்விட்டன. இந்த அதிகார  துஷ்பிரயோகங்களுக்கு தீர்வு காணப்பட வில்லை. இது இந்திய அரசியலமைப்பு மற்றும்  சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் பொறிக்  கப்பட்ட நீதி மற்றும் தீர்வுக்கான பாதிக்கப்பட்ட வர்களின் உரிமைகளை அப்பட்டமாக மீறி யுள்ளது. காஷ்மீர் மக்களைப் பாதுகாப்பதிலும், அவர்களுக்கு நிவாரணம், நீதி வழங்குவதிலும் இந்திய அரசாங்கத்தின் வரலாற்றுத் தோல்வி, இந்த முடிவில்லாத துஷ்பிரயோகங்கள் மற்றும்  தண்டனையின்மை பிரச்சனைகளுக்கு ஊட்ட மளிப்பதாக உள்ளது. எனவே, இந்திய அரசு  இத்தகைய செயல்களை தடுப்பதற்கு தேவை யான நடவடிக்கைகளை மேற்கொண்டு மனித உரிமைகளை காக்க வேண்டும்.” இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.