states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு செயலியான பார்ட் ஏஐ  (BARD AI) செயலி இந் தியா உட்பட 180க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

மாறி வரும் பொருளாதார சூழல் காரணமாக நடப்பு ஆண்டில் ஊழி யர்களுக்கு சம்பள உய ர்வு இல்லை என மைக் ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தி திரையுலகில் பிர பல சீரியலான டிஎம்கே ஒசி (TMKOC) தொடரின் தயாரிப்பாளர் அசித் மோடி மீது நடிகை ஜெனி பர் மிஸ்திரி பன்சிவால் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். 

இங்கிலாந்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து கூட்டு ராணுவப் பயிற்சி யான “அஜெயா வாரியர் -23” 7-வது கட்டத்தின் போது இந்திய ராணுவ வீரர்கள் “பஜ்ரங் பாலி கி ஜெய்” கோஷங்களை எழுப்பினர். இந்த விவ காரம் கூட்டு ராணுவப் பயிற்சியில் பெரும் சர்ச் சையாக வெடித்துள்ளது. 

முன்னாள் பிரதமர் இம் ரான் கான் கைது செல் லாது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இம்ரான் கான் கல்வி நிறு வன அறக்கட்டளை மோசடி தொடர்பான வழக்கில் கடந்த செவ்வா ய்க்கிழமை கைது செய்யப் பட்டார். இந்த விவகா ரத்தில் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கண்ட னம் தெரிவித்துள்ளது.

பழனி மலை கோவிலில் “போகர் ஜெயந்தி” விழா நடத்த அனுமதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள் ளது. கோவில் விதிமுறை களில் இல்லாததால் “போகர் ஜெயந்தி” விழா விற்கு பழனி கோவில் நிர் வாகம் அனுமதிமறுத்தது.

நாட்டிலேயே முதல் முறையாக சென்னை ஐஐ டியில் மருத்துவ அறி வியல் மற்றும் பொறி யியல் தொழில்நுட்பம் என்ற 4 ஆண்டு புதிய பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிந்து விபத்துக்குள்ளானதில் வடமாநில இளைஞர் உயிரிழந்தார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் மேற் கொள்ளப்படும் திருத்தங் களை அதன் இணைய தளத்தில் உடனே பதி வேற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.