சென்னை, ஜூன் 13- தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குறுவை தொகுப்பு திட்டத்தை தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குறுவை தொகுப்பு திட்டத்தை தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம். நடப்பாண்டு காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 இல் மேட்டூர் அணையை தமிழ்நாடு முதல மைச்சர் திறந்து வைத்து,ரூ.75.95 கோடிக்கு இந்தாண்டும் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளி லும் குறுவை தொகுப்பு திட்டத்தை தமிழ் நாடு அரசு செயல்படுத்தியது. கடந்தாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் 5.36 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடை பெற்றது. இந்தாண்டும் 5 லட்சம் ஏக்கரை தாண்டி குறுவை சாகுபடி நடைபெறு வதற்கான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக மாநில அரசு செயல்படுத்திடும் குறுவை தொகுப்பு திட்டம் விவசாயிகளுக்கு பேரு தவியாக உள்ளது.
இந்தாண்டு அறிவித்துள்ளதில் சுமார் 2.50 லட்சம் ஏக்கருக்கு ஒரு மூட்டை டிஏபி, ஒரு மூட்டை யூரியா, அரை மூட்டை பொட்டாஷ் என்ற விகிதத்தில் முழு மானி யத்தோடு வழங்க உள்ளனர். இதில் விடு படக்கூடிய எஞ்சி உள்ள குறுவை சாகுபடி நடைபெறும் பரப்பளவிற்கும் மேற்கண்ட வகையில் முழு மானியத்தோடு வழங்கு வதற்கு அரசு நடவடிக்கை எடுத்திட வேண் டும். குறுவை சாகுபடிக்கு கடன் கோரும் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற் கொள்ள வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்த முன்வர வில்லை. தமிழ்நாடு அரசு பல முயற்சிகள் செய்த போதும், காப்பீட்டு நிறுவனங்கள் குறுவை பயிர்களை காப்பீடு செய்ய முன் வராததால் விவசாயிகள் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு இல்லாததால் முழுமையான நிவார ணத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, இந்தாண்டு குறுவை பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கு உரிய முயற்சிகளை காலத்தோடு தமிழ்நாடு அரசு மேற் கொள்ள வேண்டும். மாநில அரசே புதிய காப்பீட்டு நிறுவனத்தை துவங்கிடுவதற் கான முயற்சிகளை மேற்கொள்ள வேண் டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.