தஞ்சாவூர், ஜூலை 13- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், உணவு-உணவுப் பொருட்கள் வழங்கல் துறையின் சார்பில் விவ சாயிகள் மற்றும் அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம், உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கர பாணி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டச் செய லாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் அமைச்சரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: “தற்போது, நேரடி நெல் கொள்முதலில் தனியாரை பங்கேற்க செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற தகவலால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது விவசாயிகளுக்கு உதவியாக இருக்காது. எனவே நெல் கொள்முதல், அரசின் சார்பில் நேரடியாக, தொடர்ச்சியாக நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும்.
நெல் மற்றும் விவசாய விளைபொருட்கள், சேமிப்புக் கிடங்குகள் பற்றாக்குறை யால், உணவு தானியங்கள் சேதமடைந்து விரயமாவது அதிக அள வில் உள்ளது. தேவையான அளவு சேமிப்புக் கிடங்குகளை அமைத்திட வேண்டும். திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில், தேவையான தரமான பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்திட வேண்டும். குறுவை சாகுபடி நெல் கொள்முதலில், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 விலை அறிவித்து கொள்முதல் செய்திட வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். பயிர்க் காப்பீடு செய்வதில், இன்னமும் முறையான ஏற்பாடுகள் நடைபெற வில்லை. தற்போது வரை குறுவைக்கான பயிர் காப்பீடு செய்வதில் இன்னல் ஏற்பட்டுள்ளது. எனவே, குறுவைக்கும், அடுத்து வரப்போகிற சம்பா பருவத்திற்கும், பயிர்க் காப்பீடு செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சர் அறிவித்ததை போல், உடனே குறுவை சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்து அறி வித்திட வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.