states

மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தை சுயநிதி பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துக!

சென்னை,அக்.7- மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தை சுயநிதி பள்ளி களில் படிக்கும் மாணவிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும் என்று மாணவர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் அக்டோபர் 4,5 ஆகிய தேதிகளில் கொல்லி மலையில் மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலா ளர் க.நிருபன் சக்கரவர்த்தி மற்றும் நிர்வாகிகள்  கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:  தமிழகத்தில் அனைவருக்குமான கல்வி என்பது வேறுபட்டு இருக்கிறது. கிராமப்புறங் களில் ஏழை மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் அதிக அளவு சுயநிதி பள்ளிகள் இயங்கி வரு கின்றன. இப்பகுதி மாணவர்கள் அரசு பள்ளிக்கு நிகராக சுயநிதி பள்ளிகள் மூலமே அடிப்படை கல்வி கற்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள மாணவர்களின் கல்வியை பெரும்பாலும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அல்லது சுயநிதி பள்ளிகள் வழங்கி வருகின்றன. தமிழக அரசு ஏற்கனவே பெண்களை ஊக்கு விக்கும் வகையில் திருமண உதவியாக கல்வி தகுதிக்கேற்ப உதவி தொகை, தாலிக்கு தங்கம் என்ற திட்டம் அமல்படுத்தியது. தற்போது, இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு அரசுப் பள்ளி யில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவி களுக்கு கல்வி உதவி தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டம் மாணவி களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதால் மாணவர் சங்கம் வரவேற்கிறது. ஆனால், உயர்கல்வி பெறும் அனைத்து மாணவி களுக்கும் இத்திட்டம் பயன் பெறும் வகையில் அமைய வேண்டும்.

ஒன்றிய அரசின் கல்வி கொள்கையில் பெண்கல்விக்கு முக்கியத்துவம் இல்லை, பெண்  கல்வி மறுக்கப்படுவது, மாணவிகள் உயர்கல்விக்கு பாதிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு மாணவி களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் இத்திட்டத்தை அனைத்து மாணவிகளும் பயன் பெறும் வகையில் சுயநிதி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் உயர்கல்வி பயிலும் போது பயன்பெறக் கூடிய வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். எனவே, அரசுப் பள்ளி யில் படித்து முடித்த மாணவிகளுக்கான உயர் கல்வியின் போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் திட்டத்தை அரசு  உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிக ளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும்  அதற்குட்பட்ட கல்லூரிகளில் பயின்று வரும் 500-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் தங்களின்  ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்க அனுமதி வழங்காமல் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் அலைகழித்து வருகிறது, உடனடியாக ஆய்வு மாணவர்களின் ஆய்வு கட்டுரைகளை ஏற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையை பல்கலைக் கழகம் எடுக்க வேண்டும்.  தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் மற்றும் அதற்கு உட்பட்ட கல்லூரிகளில் முதுநிலை கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு முடிவினை உடனடியாக வெளியிட வேண்டும். பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் சென்று வர நெரிசல்மிகுந்த பகுதியில் கூடுதலாக  பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு 41 உறுப்பு கல்லூரியும் அரசு  கல்லூரியாக மாற்றி அறிவித்துள்ள நிலையில்  கூடுதலாக வசூலிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை மாணவர்களிடம் திரும்பி அளிக்க வேண்டும். புற்றீசல்கள் போல் பரவும் தனியார் சட்டக்கல்லூரி களின் எண்ணிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். தனியார் சுயநிதி கல்லூரிகளின் கட்டண  கொள்ளையை தடுத்து நிறுத்தவேண்டும், மதிய உணவு திட்டத்தை 12ஆம் வகுப்பு வரை  விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.