சென்னை, மார்ச் 19- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 4,136 பணியிடங்கள் உள்ளதாக வெளியான அறிவிப்புகள் தவறான தகவல் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரி யர்கள், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், விரி வுரையாளர்கள், வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை தமிழ்நாடு ஆசி ரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. இந்நிலையில், 2023 - 2024ஆம் ஆண்டிற் கான தமிழ்நாடு கல்லூரிக் கல்வியியல் சேவையிலுள்ள அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து நேரடி ஆட்சேர்ப்புக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என 48 பக்க அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதில், 4136 பணியிடங்களுக்கு வரும் மே 15ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதை போலவே பொய்யான அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப் பட்டது. இந்நிலையில் இந்த அறிவிப்பு தவறான தகவல் எனவும், இதுபோன்ற போலியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.