புதுதில்லி, அக்.27- “தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால், இந்துத்துவா அரசியலில் பாஜக வையே விஞ்சிவிட்டார்” என்று பிர சாந்த் பூஷண் உள்ளிட்ட முன்னாள் நண்பர்களே பலர் காட்டமாக விமர் சித்துள்ளனர். தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பா ளருமான அரவிந்த் கெஜ்ரிவால், புத னன்று செய்தியாளர்களைச் சந்தித் தார். அப்போது, “நமது புதிய கரன்சி நோட்டுகளில் காந்திஜியின் புகைப் படத்துடன் ஸ்ரீகணேஷ்ஜி மற்றும் ஸ்ரீலட்சுமிஜி-யின் புகைப்படத்தையும் வைக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன். நாட்டிற்கு எல்லாம் வல்ல இறைவ னின் ஆசீர்வாதம் தேவை” என்று தெரி வித்திருந்தார். அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கி ரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளைத் தொடர்ந்து, கெஜ்ரிவாலின் நண்பர் களும் கூட அவரது கருத்துக்கு தங்க ளின் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். ஆம் ஆத்மி நிறுவனர்களில் ஒருவ ரும், அரவிந்த் கெஜ்ரிவாலின் முன் னாள் உதவியாளருமான குமார் விஷ்வாஸ், இதுதொடர்பாக டுவிட்ட ரில் வெளியிட்ட பதிவில், அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் “சிறுபான்மையினர் வாக்குகளுக்கு அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார் ஆகி யோர் போட்டியாளர்களாக இருப்பார் கள் என்பது அவருக்கு (கெஜ்ரிவா லுக்கு) தெரியும்.
அதனால் 82 சதவிகி தம் உள்ள இந்துக்களின் வாக்கு வங்கி யில் பாதியை கைப்பற்ற முடிந்தால் போதும், மோடி மீது உள்ள வெறுப்பி னால் மீதமுள்ள சிறுபான்மையினர் வாக்குகள் தனக்கு தானாக கிடைத்து விடும் என்று நினைக்கிறார். பத்திரிகை யாளர்களும், மோடி எதிர்ப்பிற்காக மட்டுமே அவரை கொண்டாடி வரு கின்றனர். அவருக்கு, தந்தை, மனைவி, குழந்தைகள், குரு, நண்பர்கள், கொள்கை எதை குறித்தும் அக்கறை கிடையாது” என்று விமர்சித்துள்ளார். ஆம் ஆத்மியின் மற்றொரு முன் னாள் பிரமுகரான அஷ்வதோசும், “விநாயகர் லட்சுமி பட விவகாரம், ஆம் ஆத்மி கட்சி தனது தில்லி மாடலில் நம்பிக்கை இழந்து விட்டதை காட்டு கிறது. கல்வி, சுகாதாரம் போன்றவை தங்களுக்கு இனி வாக்குகளைப் பெற்று தரும் என்ற நம்பிக்கையை அக்கட்சி இழந்துவிட்டது. என்ன ஒரு துரதிர்ஷ்டம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வரிசையில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷ ணும் இணைந்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், “இந்தியாவின் ரூபாய் மதிப்பு, இந்திய பொருளாதா ரத்தை உயர்த்துவதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் சிறந்த வழியைக் கண்டு பிடித்துள்ளார். இந்துத்துவ அரசிய லில் பாஜகவை விஞ்சும் புதிய முயற்சி இது” என்று கடுமையாக சாடியுள்ளார்.