states

img

திருவண்ணாமலை மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா வழங்கல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 8) நடைபெற்ற தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்வில், முதன்மை பொது மேலாளர் பாண்டி, தீக்கதிர் சென்னை பதிப்பின் முன்னாள் பொதுமேலாளர் சி.கல்யாணசுந்தரம் ஆகியோரிடம் 72 ஆண்டு சந்தா, 72 ஆறு மாத  சந்தாக்களுக்கான தொகை வழங்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் நாள்தோறும் விற்பனை செய்யப்படும் தீக்கதிர் எண்ணிக்கையில் கூடுதலாக 93 உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார், செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், வட்டார செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை செய்தியாளர் கண்ணன் நன்றி கூறினார்.

;