தருமபுரி, ஜன.23- தருமபுரி மாவட்டம், 1700 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வனக்காப்புக் காடுகளைக் கொண்டுள்ளது. கர்நாடகா, தமி ழகம் ஆகியவற்றின் எல்லைகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ள இந்த காடுகள் காவிரி, சனத்கு மார் நதி, வாணியாறு, தென் பெண்ணை ஆகிய ஆறுகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளன. தருமபுரி காடுகளில் தேக்கு, சந்த னம், வேம்பு உள்ளிட்ட மரங்க ளும், வேலிகாத்தான், துளசி, மரு தாணி, ஆவாரம் உள்ளிட்ட மூலிகை களும், யானை, சிறுத்தை, கரடி, நரி உள்ளிட்ட விலங்குகளும், கிளி, குயில், காடை, மயில், பெருங்க ழுகு உள்ளிட்ட பறவையினங்க ளும் உள்ளன. தருமபுரி மாவட்டத் தில் 38 சதவிகித வனப்பகுதியாக உள்ளது. மாநில அளவில் வனப்ப குதி 33 சதவிகிதத்திற்கு பதிலாக 24 சதவிகிதம் மட்டுமே உள்ளது. மாவட்டத்தில் உள்ள 38 சதவிகித வனப்பகுதியில் ஆடு, மாடு, மேய்த் தல், விறகு வெட்டுதல் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேசம யம் மரம் வெட்டுவதலால் வனப் பகுதியின் அடர்த்தி குறைந்துள் ளது. வனப்பகுதியை மேலும் அடர் த்தியாக்கவும், விரிவாக்கம் செய்ய வும் தருமபுரி மாவட்ட வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வரு கிறது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட வன அலுவலர்கள் கூறுகையில், மாவட்டத்தில் 1930 ஆம் ஆண்டில், வனப்பகுதி சூரிய ஒளி கூட ஊடுருவ முடியாதபடி, பசுமையான அடர்ந்த காடாக இருந்தது.
வானுயர மரங் கள் அதிகம் இருந்தன. தற்போது அதன் அடர்த்தி குறைந்து விட்டது. எனவே, பழையபடி அடர்ந்த மரங்கள் கொண்ட பசுமை காடாக மாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் 20 முதல் 30 வருடங்களில், தரும புரி மாவட்ட வனப்பகுதி பசுமை யான காடாக மாறும். காடுகள் அழிக்கப்பட்டதால், வனப்பகுதி யில் இருக்கும் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியே வருகி றது. பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் வனப்பகுதியில் காட்டின் அடர்த்தி குறைந்துள்ளது. காட்டிற்குள் அடர்த்தி குறைந்த இடங்களை கண்டறிந்து, 100 முதல் 200 மரக்கன்றுகள் வரை நடப்பட்டு வருகிறது. மேலும், பசுமை காடாக மாற்ற வரும் ஆண்டில் நபார்டு திட்டத்தின் கீழ், 4.50 லட்சம் மரக்கன்றுகள் 4 ஆயிரம் ஹெக்டரில் நட நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனத் துறையின் நர்சரியில், காட்டிற்கு வெளியே நடுவதற்கு 5 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வரு கிறது. சாலையோரம், வருவாய்த் துறை காலியிடங்கள், இந்து சமய அறநிலையத்துறை, விவசாயம் செய்யாமல் இருக்கும் காலி நிலங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், ஆலைகள் வளாகத் தில் காலியாக உள்ள இடங்களில், இந்த 5 லட்சம் மரக்கன்றுகள் நடப் பட உள்ளது. இதுபோக, விவசாய நிலத்தில் மரக்கன்று நடுவதற்கும், முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது, என்றனர்.