புதுதில்லி, செப்.6- பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோ கர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மேல் முறையீட்டுக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள் ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ்-ஸின் விஎச்பி, பாஜக உள்ளிட்ட பரிவார அமைப்புகளால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. நாட் டையே மத அடிப்படையில் பிளவுபடுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து, ரத யாத்திரை நடத்தி பாபர் மசூதி இடிப்புக்கு ஆள் திரட்டிய பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோ கர் ஜோஷி, உமா பாரதி, உத்தர பிரதேச முன் னாள் முதல்வர் கல்யாண் சிங், வினய் கட்டி யார், சாத்வி ரிதம்பரா உள்ளிட்ட 32 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது. தேச ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயன் றது, மத வழிபாட்டுத் தலத்தை சேதப்படுத்தி யது, மக்களின் மத உணர்வுகளைப் புண் படுத்தும்படி நடந்து கொண்டது, மக்களி டையே வன்முறையைத் தூண்டும் வகையில் உரையாற்றியது, சட்டவிரோதமாகக் கூடி யது, வன்முறையில் ஈடுபட்டது என்பன உள் ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழும் வழக்கு தொடரப்பட்டது.
எனினும், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வர்களுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்பதன் அடிப்ப டையில் இவர்கள் அனைவரையும் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் விடுதலை செய்தது. ஒன்றிய அரசு பாஜக வசம் உள்ளதால், இந்த வழக்கில் சிபிஐ மேல்முறையீட்டுக்கு செல்ல வில்லை. இதனிடையே, ஹாஜி மஹபூப் அக மது, சயீது அக்லக் அகமது ஆகியோர் அலகா பாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் தனர். வழக்கின் ஆதாரங்களை சிபிஐ சிறப்பு நீதி பதி முறையாகக் கருத்தில் கொள்ளாமல் உத்த ரவு பிறப்பித்துள்ளதாகவும், அதை ரத்து செய்து, அத்வானி உள்ளிட்ட 32 பேரையும் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தி இருந்தனர். இந்த மனு, நீதிபதிகள் ரமேஷ் சின்ஹா, ரேணு அகர்வால் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு திங்கட்கிழமையன்று விசார ணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்க றிஞர் சிவ் பி.சுக்லா, அரசு வழக்கறிஞர் விமல் குமார் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் மேல்முறை யீட்டு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளவர்களுக்கும் வழக்குக்கும் தொடர்பில்லை என்பதால், அவர் களது மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என வாதிட்டனர். இதனையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 26-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.