12 மொழிகளில் வெளியாகும் திருக்குறள்
சென்னை, மே 24 - ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறள் வெளியாகும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் சந்திர சேகர் தெரிவித்துள்ளார். செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் 12 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்கும் பணி நிறைவடைந்து அச்சிடும் பணி நடைபெறுகிறது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், சங்க இலக்கியங்களை இந்திய மொழிகளிலும் அயலக மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து, அனைவருக்கும் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழரின் பண்பாட்டை தெரிவிக்கும் நடவடிக்கையை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஒடியா, நேபாளி, உருது, மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படுகிறது. இந்த மாதத்திற் குள்ளாக அச்சிடும் பணி நிறைவடைந்து ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் இளைய மன்னர் மறைவு: முதல்வர் இரங்கல்
சென்னை, மே 24 - ராமநாதபுரம் இளைய மன்னரும் ராமேஸ்வரம் கோயில் தக்காருமான ராஜா என்.குமரன் சேதுபதி செவ்வாயன்று(மே24) மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ராமநாதபுரம் இளைய மன்னரும் ராமேஸ்வரம் கோயில் தக்காரு மான ராஜா நாகேந்திர குமரன் சேதுபதி மாரடைப்பால் காலமான செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திருக்கோயில், கல்விநிறுவனப் பொறுப்பு களில் சிறப்பாகச் சேவையாற்றி வந்த அவரது இந்த திடீர் இறப்பு ஈடுசெய்ய முடியாத தாகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தி னர், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவ ருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறு தலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் பாயும்: டிஜிபி
சென்னை, மே 24 - ஆவடி ஆணையர் அலுவலகத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆவடி ஆணை யரக சரகத்தில் நடைபெற்ற 30 குற்ற வழக்குக ளில் மீட்கப்பட்ட 128 சவரன் நகைகள், 72 லட்ச ரூபாய், 100 செல்போன் ஆகியவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தார். மேலும் இந்த குற்றச் சம்பவங்களில் சிறப்பாக பணி யாற்றிய ஆணையர், ஆய்வாளர், துணை ஆய்வாளர், காவலர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர் சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகவும் அதேபோல் கள்ளச்சாராய விற்பனை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் லாக்கப்பில் நடைபெறும் மரணங்களை தடுக்கும் வகையில் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன என்றும் கூறினார். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 20 ஆயிரம் பேர் ஏற்கனவே கைது செய்யப்பட் டுள்ளனர். அதில் 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும், அவர்க ளுடைய சொத்துக்களும் முடக்கம் செய்யப் படும் என்றும் தெரிவித்தார். அதேபோல் அனைத்து காவலர்களும் தன்னை நேரடி யாக சந்திக்கலாம் என்றும், குறைகளைத் தீர்க்க தயாராக உள்ளதாகவும் தெரி வித்தார்.
நாளை கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, மே 24 - சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வெப்பச் சல னம் காரணமாக மே 26 (வியாழக்கிழமை) தமிழ கம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மித மான மழை பெய்யக் கூடும். திருப்பத்தூர், வே லூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 31-க்குள் முடிக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன்
சென்னை, மே 24- காவிரி டெல்டா பாசனத்துக்கான நீரை மேட்டூர் அணையிலிருந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த தண்ணீர் 3 நாட்களில் கல்லணையை வந்து சேரும். பிறகு, டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இது 10 நாட்க ளில் கடைமடையை சென்று சேரும் என்று எதிர்பார்க்ப்படுகிறது. இந்நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகள் ஏப். 23 அன்று துவங்கப்பட்டது. 4,964 கி.மீ. தூரம் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இதுவரை 4,047 கி.மீ. நீளத்திற்கு பணிகள் முடிவடைந்துள்ளது. 82 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் போர்க்கால அடிப்படையில் கூடுதல் இயங்திரங்களை பயன்படுத்தி மே 30 ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று அமெரிக்காவை மக்கள் சீனம் எச்சரித்துள்ளது. தைவானைப் பாதுகாக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியிருப்பதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தைவானைப் பயன்படுத்தி சீனாவைக் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணத்தைக் கைவிடுவது நல்லது என்று தைவான் விவகாரங்களுக்கான சீன அரசு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
பாலஸ்தீன ஊடகவியலாளரான ஷிரீன் அபு அக்லே கொல்லப்பட்டதில் சந்தேகத்திற்கு இடமில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப்பகுதியில் செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்த ஷிரீன் இஸ்ரேல் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டார். உலகம் முழுவதும் இந்தக் கொலைக்குக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. சர்வதேச சமூகத்தின் கருத்தைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல் வழக்கம் போலவே இஸ்ரேல் கருத்து தெரிவித்திருக்கிறது. இஸ்ரேலின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ் கூறியுள்ளார்.
சோமாலியாவின் புதிய ஜனாதிபதியாக ஹசன் ஷேக் முகமது பதவியேற்றுக் கொண்டுள்ளார். பதவியேற்றுக் கொண்ட பிறகு உரையாற்றிய அவர், “நாட்டில் ஒற்றுமையைக் கொண்டு வரவும், பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவும் பாடுபடுவேன்” என்று உறுதி அளித்திருக்கிறார். மே 15 ஆம் தேதியன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஹசன் ஷேக் முகமது தேர்வு செய்யப்பட்டார்.