சென்னை,ஏப்.22- காவல்துறை விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வாலிபர் மரணமடைந்தது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கைவருமாறு: சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ஜி.சுரேஷ் (28). அவரது நண்பர் விக் னேஷ் (25). இருவரையும் கடந்த 18 ஆம் தேதி புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே வாகனச் சோதனை யில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது மருத்து வர்கள், விக்னேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்கள். விசார ணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் விக்னேஷ், காவல்துறை யின் அத்துமீறிய நடவடிக்கை காரண மாக காவல் நிலையத்திலேயே இறந்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுமட்டுமின்றி, விசாரணைக் கைதியின் உறவினர்கள் சுமார் 48 மணி நேரம் சட்டவிரோதமாக காவல்நிலையத்தில் வைக்கப் பட்டுள்ளனர். தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலைய அதிகாரிகளின் இந்த அத்துமீறிய நடவடிக்கை குறித்தும், வாலிபர் விக்னேஷ் மரணம் குறித்தும், உண்மை தன்மை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.