states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தில்லியில் மீண்டும் குண்டு வெடிப்பு?

தில்லி பிரசாந்த் விஹார் பகுதியில் வியாழக்கிழமை காலை 11.48 மணி அளவில் மர்ம பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.  தகவலறிந்த தில்லி காவல்துறை அதிகாரிகள் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் விஹார் பகுதியின் 50% இடங்களில் சோதனை மேற்கொண்ட னர்.  வியாழக்கிழமை மாலை வரை சோதனை மற்றும் விசாரணையில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது வெடி குண்டா? அல்லது வேறு எதுவும் மர்ம  பொருளா? என்பது தொடர்பாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச் செயலா ளர் கே. பாலகிருஷ்ணன், நெஞ்சக சளி காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வியாழனன்று (28.11.2024) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கட்சியின் மாநிலக்குழு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

பெண் காவலரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் முதல்வர் நிதியுதவி!

சென்னை, நவ.28- புதுக்கோட்டை மாவட்  டம், மண்டையூர் காவல் நிலையத்தில் பெண் காவல ராகப் பணிபுரிந்து வந்தவர் விமலா (28). இவர், வியாழ னன்று (நவ. 28) காலை பணி  நிமித்தமாக புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சா லையில் இருசக்கர வாக னத்தில் சென்று கொண்டிருந்  தார். அப்போது, பின்புறமாக  வந்த நான்குசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய  விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், பெண் காவலர் விமலாவின் மறை வுக்கு இரங்கல் தெரிவித் துள்ள தமிழக முதல்வர் மு.க.  ஸ்டாலின் அவரது குடும்பத் திற்கு ரூ. 25 லட்சம் நிவா ரண நிதியுதவியையும் அறி வித்துள்ளார்.

6 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்

சென்னை, நவ.28- தமிழகத்தில் உள்ள 6  மாவட்டங்களுக்கு வெள்  ளிக்கிழமையன்று (நவ. 29)  அதிகனமழை பெய்வதற் கான சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட் டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலா டுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், சனிக்கிழமையன்றும் (நவ.30) சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

4 மடங்கு அதிகரித்த போலி ரூபாய் நோட்டு

புதுதில்லி, நவ.28- கடந்த 2018-19 மற்றும் 2023-24 க்கு இடையிலான காலக்கட்டத்தில், புழக்கத் தில் இருந்த போலி ரூ.500 நோட்டுகள் எண்ணிக்கை  நான்கு மடங்காகவும், கடந்த 2020-21 ஆம் ஆண்டிலிருந்து போலியான 2,000 ரூபாய் நோட்டுகள் கண்டறியப்படு வது மூன்று மடங்காகவும் அதிகரித்தது நிதி அமைச்ச கம் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. ரூ. 500 மற்றும் ரூ. 2,000  போலி நோட்டுகள் அண்மை யில் அதிகமாக கண்டுபிடிக் கப்பட்டதாக ஒன்றிய நிதி யமைச்சர் பங்கஜ் சவுத்ரியும்  மக்களவையில் ஒப்புக் கொண்டுள்ளார்.

மேட்டூர் நீர்மட்டம்

சேலம், நவ. 28 - மேட்டூர் அணையின் நீர்  மட்டம் வியாழனன்று காலை 109.87 அடியிலிருந்து 110.07 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 78.50 டிஎம்சியாக உள்ளது.

மீனவர்களின் மானிய  டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு  

சென்னை, நவ.28-  தமிழகத்தில், வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளதன் எதிரொலியாக, மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் மீன்பிடி படகுகளுக்கான டீசல் மானியம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் முதல் திருவான்மியூர் குப்பம் வரை 2,300 செயற்கை இழை படகுகளும், 772 விசைப் படகுகளும் உள்ளன. இந்தப் படகுகளுக்கு எண்ணூர், ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, பைபர் படகுகள் மற்றும் செயற்கை இழை படகுகளுக்கு தலா 4 ஆயிரம் லிட்டர் டீசலும், விசைப் படகுகளுக்கு தலா 20 ஆயிரம் லிட்டர் டீசலும் மானிய விலையில் வழங்கப்படுகிறது.  தற்போது, வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதைத் தவிர்க்கும் வகையில்,  படகுகளுக்கு வழங்கும் மானிய டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை தொடரும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி

புதுக்கோட்டை, நவ.28- புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே பேராம்பூரை சேர்ந்த குமார் மகன் தர்ஷன்(13). அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில்  புதன்கிழமை மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் தர்ஷன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் ஓரமாக சென்ற ஒயரில் கைபட்டு மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த  உறவினர்கள் தர்ஷனை  மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை:  சிறப்பு மலை ரயில் சேவை 

சென்னை, நவ.28-  கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி சிறப்பு மலை ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  மேட்டுப்பாளையம்- உதகை, உதகை-குன்னூர், கேத்தி-உதகை ஆகிய வழித்தடங்களுக்கு இடையே சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ரயில் சேவை, டிசம்பர் 28 துவங்கி, ஜனவரி 2 வரை, 6 நாட்களுக்கு குன்னூர்-உதகை இடையே பகல் நேரத்தில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறையாண்மைக்கு எதிராக பேசிய சீமான் மீதான வழக்கு:  விரைந்து விசாரிக்க உத்தரவு

சென்னை, நவ.28-  சீமான் மீதான வழக்கை விரைந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். அப்பொழுது இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் வெளியே வந்த சீமான் மீது 2018 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கலானது. தற்போது வரை இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சீமான் மீதான இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்தித்து முதல்வர் நலம் விசாரிப்பு

சென்னை, நவ.28- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சென்னையில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை (நவ.27) இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் சளியால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், மருத்துவர்களிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், எ.வ.வேலு ஆகியோர் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். வேகமாக குணமடைகிறார் இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் மீண்டும் குணமடைந்து வருவார். வருகிற 9 ஆம் தேதி கூடும் சட்டமன்ற கூட்டத்தில் அவர் குரலைக் கேட்க ஆவலுடன் இருக்கிறோம். மீண்டும் மக்கள் பணிக்குத் திரும்புவேன் என்றார்.