states

மல்யுத்த வீரர்கள் துன்புறுத்தல் சம்பவம் தேசத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது

விசாகப்பட்டினம்,  மே 8- மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரத்தில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்  தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஒன்றிய அரசு தயக்கம் காட்டுகிறது. நடவடிக்கை எடுப்பதில் பாஜக அக்கறையின்றி உள் ளது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  பி.வி.ராகவலு.  ஞாயிறன்று செய்தியாளர்களிடம் பேசிய பி.வி.ராகவலு, “பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று கூறும் பாஜக, மல்யுத்த வீரர்களை துன்புறுத்திய சம்பவத்தில் பதி லளிக்கத் தவறிவிட்டது” என்றார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரி வித்த விளையாட்டு வீரர்களைப் பாராட்டிய ராகவலு, இந்த விவ காரத்தை அனைத்து விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல, விளையாட்டு சங்கங்கள் கண்டிக்க வேண்டும்.

நீதிமன்றத் தலையீட்டின் பேரில் தான் குற்றம்சாட்டப்பட்டவர் மீது முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்ட தை நினைவு கூர்ந்த ராகவலு,  மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய தற்காக மகளிர் அமைப்புகள், விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவற்றைப் பாராட்டினார். பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும். மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதி யாக துன்புறுத்திய சம்பவம் நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு இனியாவது விழித்துக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு  நீதி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். மேலும், விசாகப்பட்டினம் எஃகு ஆலைக்கு செயல்பாட்டு மூல தனத்தை திரட்டுவதற்கான ஏலம் குறித்துப் பேசிய ராகவலு,  ஏலத்தில் பங்கேற்பதற்கான வழிகாட்டு நெறிமுறை குறிப்பை வெளியிட வேண்டும். ஏலத்தில் பங்கேற்ற 29 நிறுவனங்களில், 19 நிறுவனங்கள் நிராகரிக்கப்பட்டன, ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்களில் பெரும்பாலா னவை வெளிநாட்டு நிறுவனங்கள் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக் கின்றன.  அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.  விசாகப்பட்டினம் எஃகு  ஆலைக்கு ஒன்றிய ஆட்சியாளர்கள்   சுரங்கங்களை ஒதுக்காதது தான் ஆலையை நஷ்டத்தை நோக்கி தள்ளு வதற்கும், படிப்படியாக தனியார்மய மாக்கலுக்கு இட்டுச் செல்வதற்குமான காரணம் என்றும் விமர்சித்தார்.