சென்னை, ஏப். 18 - தனியார் கல்லூரிகளில் மருத் துவ மேற்படிப்புக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது. இந்த முறை கேடு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. 2020 - 21ஆம் கல்வியாண்டில் தனி யார் மருத்துவக் கல்லூரிகளில் காலி யாக உள்ள 113 மருத்துவ மேற்படிப்பு இடங்களில், கலந் தாய்வு நடத்தாமல் 90 இடங்கள் நிரப்பப்பட்டதாக கூறி மருத்துவர்கள் சந்தோஷ்குமார், கீதாஞ்சலி ஆகி யோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தகுதி பெறாத வர்களை மருத்துவ மேற்படிப்பில் சேர்க்க மருத்துவக் கல்வி இயக்கு நரக அதிகாரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் இடையிலான சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? கல்லூரிகள் வசூலித்த பணம் எவ்வளவு? என்பது குறித்து விசாரிக்க சிபிசிஐடி-க்கு உத்தர விட்டது. அதன்படி சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கையில், இந்த முறை கேட்டிற்கு மருத்துவ மேற்படிப்பு தேர்வுக் குழுவின் அப்போதைய செயலாளர் செல்வராஜன் தான் காரணம் என்றும் இந்த முறை கேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பல முட்டுக்கட்டை கள் எழுந்ததால் வழக்கு கூட பதிய முடியவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டது.
இதை மேற்கோள்காட்டிய நீதி பதி, செல்வராஜனின் ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க உத்தர விட்டார். இந்த முறைகேட்டில் தொடர்புடைய அடையாளம் தெரிந்த; தெரியாத நபர்கள், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு எதிராகவும் விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து செல்வராஜன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு திங்களன்று (ஏப்.18) தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கர வர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது செல்வராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா காலகட்டத்தில் நடத்தப்பட்ட இரண்டு கலந்தாய் வுகளில் இடங்கள் நிரம்பாததால் தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதியளிக்கப் பட்டது எனவும், இந்த முடிவு தனிப்பட்ட முறையில் செல்வராஜன் எடுக்கவில்லை எனவும் வாதிடப் பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதி பதிகள், அரசு ஒதுக்கீடு இடங்க ளுக்கு கலந்தாய்வு நடத்திய தேர்வு குழு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு நடத்தாதது ஏன் எனவும், கலந்தாய்வு நடத்தாமல் தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக செயல் பட்டுள்ளதாகவும் தேர்வுக்குழு செய லரின் நடத்தை குறித்து அதிருப்தி தெரிவித்தனர். பணி நீட்டிப்பு ஏதும் வழங்கப் படாத நிலையில், தேர்வுக்குழு செய லாளராக செல்வராஜன் பதவியில் தொடர்ந்துள்ளதாகவும், அரசு அதிகாரிகளின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் எனத் தெரி வித்த நீதிபதிகள், தீவிரமான இந்த வழக்கை ஏன் சிபிஐ-க்கு மாற்றக் கூடாது? என்று கேள்வி எழுப்பிய தோடு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.