states

முதல்வர் வீடு முற்றுகை ஏபிவிபி அமைப்புக்கு நீதிமன்றம் கண்டனம்

சென்னை, செப்.15- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டை முற்று கையிட்டு ஏபிவிபி ( பாஜக மாணவர் அமைப்பு)நடத்திய போராட்டத்திற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. தஞ்சை மாவட்டப் பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த பிப்ரவரி 14  ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லத்தின் அருகே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினரை தாக்கி, உடைகளை கிழித்து,  காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியதாக பாது காப்புப் பணியில் ஈடுபட்டி ருந்த அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் ராஜே ஸ்வரி புகார் அளித்தார். இந்தப் புகாரில் ஏபிவிபி அமைப்பைச் சேந்த் 35-க்கும் மேற்பட்டோர் மீது சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக ஒன்று  கூடுதல், கலகம் செய்ய தூண்டிவிடுதல், இரு பிரி வினரிடையே விரோதத்தை தூண்டுதல் ஆகிய பிரிவு கள் மற்றும் பொது சொத்துக் களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்  வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கவுசிக், உகேந்திரன், சுசீலா, அமர் வஞ்சிதா உள்ளிட்ட 31 பேர்  சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளனர். இந்த மனு, நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு வியாழ னன்று(செப்.15) விசா ரணைக்கு வந்தது. வழக்கை  விசாரித்த நீதிபதி, இது போன்ற போராட்டங்களை ஊக்குவிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

;