சென்னை, ஜூன் 25- ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் - முறைகேடுகள் குற்றச்சாட்டுக்களில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட அரசு உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்புத்துறை 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதமே அனுமதி கேட்டிருப்ப தாகவும், தமிழக அரசு இன்னும் அனு மதி வழங்கவில்லை என்றும் பத்திரிகை களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த அஇஅதிமுக ஆட்சிக் காலத் தில் மிகக் கடுமையான ஊழல் மற்றும் முறைகேடுகள் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர் எஸ்.பி. வேலுமணி. அவரது வீட்டில் நடந்த வருமான வரி சோதனைகளுக்கு பின்பு அவர் மீதான வழக்கில் உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. அதேபோன்று எந்தவொரு ஊழல் மற்றும் முறைகேடுகளை அமைச்சர் மட்டுமே செய்துவிட முடியாது. அதி காரிகள் அதற்கு துணைபோவதும், பங்குதாரர்களாக இருப்பதும் பல நேர்வுகளில் வழக்கமாக உள்ளது. திட்ட மதிப்பீடுகளின் போது வழிகாட்டு நெறி முறைகளுக்கு மாறாக, உத்தேச மதிப் பீடுகளை தாறுமாறாக நிர்ணயித்து அதன் மூலம் பல அதிகாரிகள் ஊழ லுக்கும், முறைகேடுகளுக்கும் துணை போனதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ,அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு 2021 நவம்பர் மாதமே அனுமதி கேட்டதாகவும், ஆறு மாதங்கள் கடந்துவிட்ட பிறகும் தமிழக அரசு அதற்கு இன்னும் அனுமதி வழங்க வில்லை என்றும் சொல்லப்படுகிறது.
தண்டிக்காமல் விடுவது ஊக்கமளிப்பதாகிவிடும்
மக்களின் வரிப்பணம் விரயமா வதற்கும், ஊழலுக்கும், முறைகேடு களுக்கும் துணைபோன அதிகாரிகள் மீது கடந்த பல வருடங்களாகவே குற் றச்சாட்டுக்கள் வந்தபோதும் அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை என்கிற நிலையே நீடிக்கிறது. அரசு அதிகாரி கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களே தவிர, அமைச்சர்களின் சட்டவிரோத நட வடிக்கைகளுக்கு துணைபோக வேண் டியவர்கள் அல்ல. இது கடுமையான குற்றமாகும். இத்தகைய முறைகேடு களில் அதிகாரிகள் தண்டிக்கப்படாமல் விடப்படுவது தொடர்ந்து தவறுகள் செய்து வருபவர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக ஆகிவிடும். முறை கேடுகள் செய்த அமைச்சர்கள் மீது ஆரம்பத்தில் விசாரணை வேகமாக நடப்பதும், பின்னர் அதைப்பற்றி சம் பந்தப்பட்ட துறைகள் மெத்தனமாக நடந்து கொள்வதும் வழக்கமாக உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக ஊழல் - முறைகேடுகளில் ஈடுபட்ட சம் பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதியளிப்பதற்கும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலு மணி மீதான வழக்கை விரைவுபடுத்து வதற்கும் தமிழக அரசு விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.