தோழர் ஆர்.உமாநாத் அவர் களின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று (ஏப்.25) புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது. இத்தகைய மிக முக்கி யமான தருணத்தில் மட்டுமல்ல; எப்போ தும், அவரது பங்களிப்பையும், அவரைப் போன்ற இதர தலைவர்களின் பங்க ளிப்பையும் நினைவில் கொள்வது மிக வும் அவசியமானதாகும். மகத்தான தலை வர்களின் வாழ்வை நினைவு கூர்வதென் பது, அவர்களின் தியாகத்தைப் போற்று வதற்காக மட்டுமல்லாது, அவர்கள் ஏற்றுக் கொண்ட லட்சியங்களை பின் தொடர்ந்து நாமும் அவர்களின் வழியில் பயணிக்க வேண்டும் என்பதற்காகவே! தோழர் ஆர்.உமாநாத் அவர்களுடன் 1973 ஆம் ஆண்டிலிருந்து பயணித்த அர சியல் வாழ்வு பல அனுபவங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. சிஐடியு அமைப்பின் ஏழாவது மாநாட்டில் தோழர் ஆர். உமா நாத் அவர்களின் தொகுப்புரை மிக முக்கி யமானது. “சிஐடியு அமைப்பின் பணி களுக்காக முழுநேரமும் தம்மை அர்ப்ப ணித்துக் கொள்ளும் ஊழியர்கள் இன்று நமக்கு கூடுதலாக தேவைப்படுகிறார்கள். அத்தகைய தோழர்களை நீங்கள் அனை வரும் கண்டறிய வேண்டும்” என கேட்டுக் கொண்ட அவர் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டார்: “சமீபத்தில் என்னை சந் தித்த ஒருவர் நான் அடுத்த மாதத்திலி ருந்து சிஐடியு ஊழியராக பணியாற்ற விரும்புகிறேன் என சொன்னார். அது என்ன அடுத்த மாதம். இந்த மாதத்திலி ருந்தே பணியாற்ற முடியாதா என கேட்ட தற்கு அவர், அடுத்த மாதம் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று பதிலளித்தார். சர்க்காருக்கும், முதலாளிகளுக்கும் ஓடாக உழைத்து ரத்தம் சுண்டிய பிறகு ஊழி யர்களாவது என முடிவெடுப்பதை விட உடலில் வலுவும், இளமையும் இருக்கும் போதே ஊழியர்களாக வர வேண்டும் என்பதுதான் தேவையானது” என தோழர் உமாநாத் குறிப்பிட்டார்.
அந்த மாநாட்டில் அவர் குறிப்பிட்டது இன்றைக்கும் பொருந்தும் தேவையாக இருக்கிறது. தோழர் ஆர்.உமாநாத் அவர்கள் அர சியல் தலைமைக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரி வித்தபோது, “ஒரு பெரும் கஷ்டமான பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக நான் பார்க்கிறேன்” என்றார். கட்சிப் பணிகளை பொறுப்பு எனப் பார்க்க வேண்டுமே தவிர பதவியாக பார்க்கக் கூடாது எனும் உணர்வை வெளிப்படுத்துவதாக அவரது பதில் அமைந்திருந்தது. ஹைதராபாத்தில் நடைபெற்ற கட்சி யின் 17 வது அகில இந்திய மாநாட்டின் பிரதி நிதியாக பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் மீது எனது ஆட்சே பணையை பதிவு செய்தேன். அம்மாநாட் டிற்கு பிறகு ஒரு நாள் அலுவலகத்தில் என்னை சந்தித்த தோழர் ஆர்.உமாநாத், என்னிடம், “உங்களுக்கு எந்த பிரச் சனையின் மீது மாற்றுக் கருத்து இருந்தது” என கேட்டு தெரிந்து கொண்டார். கட்சி யின் தலைமைப் பொறுப்பில் இருந்தா லும் கீழ்மட்டத் தோழர்களின் அபிப்ரா யங்களை தெரிந்து கொள்ளும் உயரிய பண்பாக அதை உணர முடிந்தது. கம்யூ னிஸ்ட் தலைவர்கள் அனைவரும் ஒவ்வொரு வகையிலும் சிறப்பானவர் களே. தோழர் ஆர். உமாநாத் அவர்கள் தனித்துவமானவர். அவரது நூற்றாண்டு விழாவில் அவரது நினைவுகளையும், லட்சியங்களையும் நெஞ்சில் ஏந்துவோம்.