நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டம் ஓடிங் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி விட்டு தொழிலாளர்கள் வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்த னர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படையினர், சுரங்கத்தொழிலாளர்களை கிளர்ச்சி யாளர்கள் என நினைத்து தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். கிராம மக்கள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தார். கடந்த 2021 டிசம்பர் 4 அன்று நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக, நாகாலாந்து மாநில காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழு 30 ராணுவ வீரர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.