புதுதில்லி, ஜூன் 9 - முகமது நபியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் மீது, ஒருவழியாக தில்லி காவல்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது. பொது அமைதிக்கு எதி ராக செய்திகளை வெளியிட்டதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவுகள் 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் மக்க ளைத் தூண்டுதல்), 295 (மத நல்லி ணக்கத்தைக் குலைக்கும் வகையில், மதவழிபாட்டுத் தலங்களை இழிவு படுத்துதல்), 505 (பொது அமை திக்கு குந்தகம் விளைவிக்கும் வகை யில் தவறான செய்திகளைப் பதி விடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரோடு நிற்காமல், செய்திகளை இடுகையிட்டவர்கள், பகிர்ந்தவர்கள் பிரிவினைவாதத்தின் அடிப்படையில் மக்களைத் தூண்டி யவர்கள் என்று கூறி, மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி, நரசிங்கானந்த், ஷதாப் சவுகான், சபா நக்வி, மௌ லானா முப்தி நதீம், அப்துர் ரஹ்மான், அனில் குமார் மீனா, மற்றும் குல்சார் அன்சாரி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட வர்களின் சமூக வலைதள பக்கங் களை கண்காணித்ததில் மதவெறி தொடர்பாக பதிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் உளவுத்துறை இணைவால் (IFSO) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நுபுர் சர்மா மீது முதன்முதலாக மகாராஷ்டிரா காவல்துறைதான் வழக்கு பதிவு செய்தது. பல்வேறு நபர்கள் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு கள் தொடர்பாக, நுபுர் சர்மா ஜூன் 22 ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மும்பை காவல்துறை அவருக்கு சம்மனும் அனுப்பியது. எனினும் ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டிலுள்ள தில்லி காவல்துறை நுபுர் சர்மா மீது வழக்கு பதிவு செய்ய வில்லை. இதனைச் சுட்டிக்காட்டி, நுபுர் ஷர்மாவையும், நவீன் குமார் ஜிண்டாலையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று தில்லி காவல்துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலச் செய லாளர் கே.எம். திவாரி வலியுறுத்தி இருந்தார். இதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். இந்த பின்னணியிலேயே நுபுர் சர்மா உள்ளிட் டோர் மீது தில்லி காவல்துறை தற்போது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.