states

அரசை கவிழ்க்க வாய்ப்பு தேடும் ஆளுநர் நீடிக்கலாமா?

15-6-2023 அன்று, எனது அமைச்சரவை சகாக்  களில் ஒருவரான வி.செந்தில்பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்  பட்டதால், அவர் வகித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு  மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளை எனது அமைச்சர வையில் உள்ள வேறு இரண்டு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்ய விரும்பி, செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தக்க வைக்க விரும்பி, இலாகா மாற்றம் தொடர்பான கடிதம் 15.6.2023 அன்று ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இலாகா மாற்றத்தை ஏற்றுக்கொண்டு 16.6.2023 அன்று ஆளுநர் எனக்குக் கடிதம் எழுதினார். அதில் செந்தில்பாலாஜி குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்  கொள்கிறார் என்பதால், இலாகா இல்லாத அமைச்ச ராக அவர் தொடர்வார் என்ற எனது பரிந்துரையை ஏற்க  முடியாது என்று ஆளுநர் தெரிவித்தார். ஆளுநரிடமி ருந்து மேற்கண்ட கடிதம் கிடைத்ததும், செந்தில்பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பது தொடர்பான எனது பரிந்து ரையை வலியுறுத்தி அன்றே பதில் அனுப்பினேன். அமைச்சர்கள் நியமன விவகாரத்தில் 164(1) பிரிவுக்கு முரணாகவும், எனது ஆலோசனைக்கு முரணாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுகிறார் என்பதையே இச்செயல்கள் காட்டுகின்றன.

இது ஒருபுறமிருக்க, முன்னதாக 31-5-2023 அன்று  வி. செந்தில்பாலாஜி மீதான “கிரிமினல் நடவடிக்கைகள்” அவருக்கு சாதகமாக முடிவடையும் வரை, அவரை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்குமாறு ஆளுநர் கடிதம் அனுப்பிய நிலையில், அதற்கு உடனே 1.6.2023 தேதியிட்ட ஒரு கடிதத்தை நான் எழுதி னேன். அக்கடிதத்தில் சட்டப்படி, ஒரு அமைச்சர் கைது  செய்யப்படுகிறார் அல்லது ஒரு விசாரணை அமைப்பால்  விசாரிக்கப்படுகிறார் என்பதற்காக அவர் பதவி வகிக்கத் தகுதியற்றவர் ஆகமாட்டார் என்பதை விரிவாக விளக்கி னேன். அந்த வகையில், (1) விசாரணையை எதிர்கொள்ளும் நபர், (2) குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட நபர் மற்றும் (3) நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தண்டிக்கப்பட்ட நபர் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை நான் குறிப்பிட்டேன். லில்லி தாமஸ் எதிர் இந்திய ஒன்றியம் (2013) பிரிவு 7, உட்பிரிவு 653 என்ற வழக்கில், உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி, நீதிமன்றத்தால் தண்டிக் கப்பட்டால் மட்டுமே ஒருவர் அமைச்சர் அல்லது சட்ட மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவார் என்று சுட்டிக்காட்டினேன். ஒரு அமைச் சரை நியமிப்பது அல்லது நீக்குவது முதல்வரின் தனிப்பட்ட விருப்பம் என்றும், ஆளுநரின் இத்தகைய பரிந்துரை  சட்டவிரோதமானது என்றும் கடிதம் மூலம் ஆளு நருக்குத் தெரிவித்தேன்.

இந்தச் சூழ்நிலையில், அனைவரையும் அதிர்ச்சி யிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் வகையில், 29.6. 2023 அன்று இரவு 7:45 மணியளவில் ஆளுநர் ஒரு கடி தத்தை எனக்கு அனுப்பினார். அதில், இந்திய அரசிய லமைப்பின் 154, 163 மற்றும் 164- ஆவது பிரிவுகளை மேற்கோள் காட்டி, அமைச்சர் வி. செந்தில்பாலாஜியை உட னடியாக அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்கிய தாகக் குறிப்பிட்டிருந்தார். ஆளுநரின் அந்தக் கடி தத்துக்குப் பதில் அளிப்பது தொடர்பாக நான் ஆலோ சனை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென அன்றி ரவு 11:45 மணிக்கு, 29.6.2023 தேதியிட்ட ஆளுநரின் கடி தத்தை “நிறுத்திவைக்கும்” மற்றொரு கடிதம் ஆளுநரி டமிருந்து எனக்குக் கிடைத்தது. அந்த இரண்டாவது கடி தத்தில், இந்தியத் தலைமை வழக்கறிஞரின் கருத்தைப் பெறுமாறு உள்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக ஆளுநர் தெரிவித்திருந்தார். இப்பிரச்சனை தொடர்பாக நாடு முழுவதும் பரவலாக விவாதங்கள் எழுந்தன. அனைத்து முன்னணி நாளி தழ்களும் தங்கள் தலையங்கங்களில் ஆளுநர் ஆர்.என். ரவியின் முறையற்ற செயல்பாட்டைக் கண்டித்துக் கடுமையாக விமர்சித்திருந்தன. தனது இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஆளுநர் பதவியை ஆளுநர் ஆர்.என். ரவி சிறுமைப்படுத்தியுள்ளார்.

ஆளுநரின் 29-6-2023 தேதியிட்ட இந்த இரண்டு  கடிதங்களுக்கும், நான் 30.6.2023 அன்று அனுப்பிய  கடிதத்தில், “சட்டப்பிரிவு 164 (1)-இன்கீழ், முதல்வரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆளுநர் அமைச் சர்களை நியமிக்கிறார் மற்றும் நீக்குகிறார். அந்த வகை யில் அமைச்சரவையில் யார் இடம்பெற வேண்டும் அல்லது யார் இடம்பெறக் கூடாது என்பதை முடிவு செய்யும்  அதிகாரம் ஆளுநருக்கு இல்லை” என்பதை மீண்டும் வலியுறுத்தினேன். 29-6-2023 தேதியிட்ட ஆளுநரின் கடிதங்கள், அரசியலமைப்பிற்கு முரணானவை, செல்லா தவை மற்றும் சட்டத்திற்கு புறம்பானவை என்பதால் தான்  அவற்றைப் புறக்கணித்தேன். ஆளுநர் என்பவர் அரசியல் விருப்பு வெறுப்புகள், கட்சி அரசியல் அல்லது எதிர்கால நியமனங்கள் குறித்த  எதிர்பார்ப்புகள் அற்றவராக இருக்க வேண்டும் என்ற  எனது கருத்தை நீங்கள்(குடியரசுத் தலைவர்) ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். 

மத்திய ஆளும் கட்சியை எதிர்க்கும் ஒரு கட்சியின் கைகளில் மாநில ஆட்சி இருக்கும்போது, மாநிலத் தலை நகர்களில் அமர்ந்துகொண்டு, அந்த மாநில அரசை கவிழ்க்கும் வாய்ப்பைத் தேடும் ஆளுநரை வெறும் ஒன்றிய அரசின் முகவராகத்தான் கருதமுடியும். ஆளு நரின் இத்தகைய செயல் நமது கூட்டாட்சித் தத்துவத்தை சிதைத்து, இழிவுபடுத்தி, இந்திய ஜனநாயகத்தின் அடிப்ப டைத் தத்துவங்களையே அழித்துவிடும். தமிழக ஆளு நர் ஆர்.என். ரவி, இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அரசியல் சாசனத்தையும், சட்டத்தையும் பாதுகாப்ப தற்கும், தமிழக மக்களின் சேவைக்கும், நல்வாழ்விற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதற்கும், 159-ஆவது  பிரிவின்கீழ் எடுத்த உறுதிமொழியை ஆளுநர் ஆர்.என். ரவி மீறியுள்ளார் என்பது தெளிவாகிறது. அவர்  வகுப்புவாத வெறுப்பைத் தூண்டிவிட்டு, மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். அதுமட்டு மல்லாமல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள்மீது வழக்கு தொடர சிபிஐ வேண்டுகோள் விடுத்தும், அதற்கு அனுமதி தராமல் காலம் தாழ்த்தி வருகிறார். அதோடு, எனது அமைச்சர் ஒருவர் மீது வழக்கு விசாரணை தற்போது தொடங்கியுள்ள நிலையில், அவரை “டிஸ்மிஸ்” செய்ய அவசர கதியில் செயல்படுவதன் மூலம் தனது அரசியல் சார்புகளை வெளிப்படுத்தியுள்ளார். ஆர்.என். ரவி, தனது நடத்தை மற்றும் செயல்பாடு கள்மூலம், தான் ஒருதலைப்பட்சமானவர் மற்றும் ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளார். அவர் உயர் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு தகுதியானவர்.

;