states

இந்த ஆண்டின் இறுதியில் மக்கள் தொகை அதிகரிப்பில் முதலிடத்தை பிடிக்கும் இந்தியா

ஐ.நா.சபை, ஏப்.19-  இந்த ஆண்டின் இறுதியில் மக்கள் தொகை  அதிகரிப்பில் இந்தியா முதலி டத்தைப் பிடிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகை நிலை - 2023 அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் ஏப்ரல் 19 அன்று வெளியிட்டுள்ளது. அதில் உலகில் மக்கள் தொகை வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என  கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘’மக்கள் தொகையில் இந்தியா, இந்த ஆண்டு சீனா வை பின்னுக்குத் தள்ளும். இந்த ஆண்டின் இறுதியில் இந்திய மக்கள் தொகை 142.86 கோடியாக இருக்கும்.  சீன மக்கள் தொகை  142.57 கோடியாக இருக்கும். மூன்றாம் இடத்தில்  அமெரிக்க மக்கள் தொகை 34 கோடியாக இருக்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கம் சார்ந்த ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற ஐநா அதிகாரி கள் கூறுகையில் , ‘’மக்கள் தொகையில் இந்தியா, இந்த மாதம் சீனாவை பின்னுக்குத்  தள்ளும். எனினும், இந்த மாதத்தில் அது என்று நிகழும் என துல்லியமாகக் கூற முடியாது. ஏனெனில், மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்தியா கடந்த 2011 ஆம் ஆண்டு எடுத்தது. அதன்பிறகு 2021 இல்  எடுத்திருக்க வேண்டும். கொரோனா பெருந் தொற்று காரணமாக அது தாமதமாகி வரு கிறது.

மக்கள் தொகை சார்ந்து இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து கிடைத்துள்ள புள்ளி விவரங்கள் பழையதாக இருப்ப தால், இந்தியா எந்த நாளில் சீனாவை பின் னுக்குத்தள்ளும் என்பதை துல்லியமாகக் கூற இயலாத நிலை உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 804.50 கோடியாக இருக்கும். இதில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகையை இந்தியாவும், சீனாவுமே கொண்டிருக்கும். இருந்தபோதிலும், இவ்விரு நாடுகளிலும் மக்கள் தொகை பெருக்க வேகம் தற்போது குறைந்து வரு கிறது. கடந்த 60 ஆண்டுகளாக ஆண்டுக் காண்டு உயர்ந்து கொண்டே இருந்த சீன  மக்கள் தொகை கடந்த ஆண்டுதான் முதல்  முறையாக அதற்கு முந்தைய ஆண்டை விட குறையத் தொடங்கியது. இனி, இது  தொடர்ந்து குறையும் என எதிர்பார்க்கப்படு கிறது. சீன மக்கள் தொகை சரிவு அதன்  பொருளாதாரத்திலும், உலகிலும் தாக் கத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் கடந்த 2011 முதல் அதன் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 1.2 சதவீதமாக உள்ளது. அதற்கு  முந்தைய 10 ஆண்டுகளில் இந்த வளர்ச்சி 1.7 சதவீதமாக இருந்தது’’ என்று தெரி வித்தனர்.  அறிக்கையில், இந்திய நாட்டின் மக்கள்  தொகையில் 68 சதவீதம் பேர் 15 முதல்  64 வயத்துக்குட்பட்டவர்கள் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. இந்திய ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 71 வயது என்றும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 74 வயது  என்றும்  நாட்டில் இருப்பவர்களில் உழைக்  கும் வயதில் உள்ளவர்கள் அதிகம் இருப்ப தால் இது இந்தியாவுக்கு சாதகமான ஒன்றா கவே இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.