சென்னை, மே28- பத்திரிகையாளர்களைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணா மலைக்கு தமிழ்நாடு பத்திரிகை யாளர் சங்கம் (டியூஜே) மற்றும் சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் (எம்யூஜெ) கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து, டியூஜே மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த அவதூறு பேச்சு, ஜனநாயகத்தின், நான்காவது, தூணான பத்திரிகை சுதந்திரத்தையும் பத்திரிகை யாளர்களின் உரிமையை அவ மதிக்கும் செயலாகும். பத்திரிகை யாளர்களை சீண்டிப்பார்க்கும் போக்குகளை கைவிட்டு,தனது அவதூறு பேச்சுக்கு, அண்ணா மலை மன்னிப்புகோர வேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மணி மாறன் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மே 27 அன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, விதிகளை மீறி பேனர் வைக்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு “உங்களுக்கு 200 ரூபாய்” என அவரை இழிவுபடுத்தி பதிலளித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு எழுந்தவுடன், “சரி 500 ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்”,“ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்... 2 ஆயிரம் ரூபாய் அறிவாலயத்தில் இருந்து கிடைத்துவிடும்” என்றெல்லாம் நாவடக்கம் இல்லா மல் அடுத்தடுத்து அவதூறுகளை அண்ணாமலை அள்ளி வீசி யுள்ளார். கொச்சையாகவும் ஏலம்விடும் ஒரு கமிஷன் ஏஜெண்டு போலவும், நிதானம் இழந்துபேசி யுள்ளார். கேள்வி கேட்கும் பத்திரிகை யாளர்களை இழிவுபடுத்துவது, அநாகரிகமாக நடந்துகொள்வது, மிரட்டுவது போன்ற நடவடிக்கை களை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கை யில் மணிமாறன் கூறியுள்ளார்.