states

ரேசன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்க ஏற்பாடு

சென்னை, ஜூலை 3- தமிழ்நாட்டில் தக்காளி விலையை கட்டுப்படுத்த ரேசன்  கடைகளில் ரூ.60க்கு விற்பனை  செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருக்கிறார். தக்காளி விலை கிலோ ரூ.130 வரை உயர்ந்துவிட்டதால் அதை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு  சார்பில் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் திங்களன்று (ஜூலை 3) கூட்டுறவுத்துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர் களிடம் கூறியதாவது:- தக்காளியை குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜுலை4) முதல் ரேசன் கடைகளில்  தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது. வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என 3 ஆக பிரித்து  மொத்தம் 82 ரேசன் கடைகளில்  தக்காளி விற்பனை செய்யப்படும்.  பின்னர் அனைத்து மாவட்டங்களி லும் சில ரேசன் கடைகளில் தக்காளி  விற்பனை செய்யும் அளவில் இந்த  திட்டம் விரிவுபடுத்தப்படும். தமிழ்நாடு முழுவதும் மொத்தம்  111 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். ஒரு கிலோ  தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

;