states

மே 12 - ஊதிய உயர்வு பேச்சு

சென்னை, மே 5- அரசு போக்குவரத்து ஊழியர்களின் 14 வது பேச்சு வார்த்தை மே 12 அன்று நடைபெறும் என்று சட்டப்பேரவை யில் அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று(மே 5)  போக்குவரத்து மானியக் கோரிக்கை மீது விவாதம் நடை பெற்றது. அப்போது பேசிய உறுப்பினர்கள் பலரும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை எப்போது துவங்கப்படும் என்ற னர். பின்னர் பதிலளித்து பேசிய அமைச்சர் சா.சி. சிவ சங்கர்,“போக்குவரத்துத்துறையின் எதிர்கால கொள்கை கள் மற்றும் திட்டங்கள் போன்றவை அரசு போக்கு வரத்துக் கழங்கங்கள் அனைத்து அம்சங்களிலும் நாட்டின் சிறந்த நிலைக்கு மாற்றம் மற்றும் 2030 ஆம்  ஆண்டிற்குள் நிலையான வளர்ச்சி இலக்கினை அடை வதற்கும் உதவுகிறது” என்றார். மாநிலத்திலுள்ள ரயில் பாதைகளை வலுப்படுத்தவும் புதிய ரயில் பாதைகள், இரட்டை ரயில் பாதைகள் மற்றும் அகில ரயில் பாதைகள் அமைப்பதற்கும் தேவையான நிலத் தேவையை பூர்த்தி செய்ய ரயில்வே துறையுடன் போக்குவரத்து துறை ஒருங்கிணைந்து செயலாற்றி வரு கிறது என்றும் அமைச்சர் கூறினார். மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை, பேருந்து இயக்க தூரம், பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை, பயணிகளின் அடர்வு விகிதம் மற்றும் விபத்துக்களை குறைப்பது போன்ற அம்சங்களின் அடிப்படையில் பொதுப் போக்குவரத்தை நாட்டின் முதலாவது இடத்திற்கு கொண்டு  வருவதற்கு போக்குவரத்து துறை முயற்சி எடுத்து வரு கிறது எனவும் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் அதிகமாக புழுக்கத்தில் இருப்பது இரு  சக்கரவாகனங்கள்தான். வாங்கும்போது மட்டுமே காப்பீடு செய்கிறார்கள். அதன்பிறகு, பெரும்பாலானோர் புதுப்பிப்  பது கிடையாது. இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது குடும்பத்தின் நிலையை கருதி இன்சூரன்ஸை தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அறி வுறுத்தினார். அரசு போக்குவரத்துக் கழகம் 48 ஆயிரம் கோடி ரூபாய்  நட்டத்தில் இயங்கி வருகிறது. அதனை சீர் செய்ய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பேருந்து சேவை மக்களுக்கு தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் கூடுதலாக நிதி ஒதுக்கி கொடுத்து வருகிறார் என்றும் 14 வது ஊதிய பேச்சு வார்த்தை வருகிற 12 ஆம் தேதி நடைபெறும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். பின்னர் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், “தற்போது தமிழகத்தில் 3 முதல் 12 வயது வரையிலான  குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனி 5 வயது வரை குழந்தைகளுக்கு அனைத்து பேருந்துகளிலும் கட்ட ணம் வசூலிக்கப்படாது, அவர்கள் இலவசமாக பய ணிக்கலாம். சென்னை,மதுரை, கோவை ஆகிய  மாநகர போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளிலும் தேசிய பொது பயன்பாட்டு அட்டையுடன் அனைத்து பொது போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்கும் வகையில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகப் படுத்தப்படும் என்றும் கூறினார்.