states

img

நிதிச் சுமையில் அண்ணாமலை பல்கலை.: அமைச்சர்

நாகைமாலி: அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் 12 முதல் 20 ஆண்டு களுக்கும் மேலாக இளநிலைப் பொறியாளர், இளநிலை தொழி ல்நுட்ப அலுவலர் - நிலை 2, தொழில் நுட்ப உதவியாளர், ஃபோர்மென் நிலை 1 போன்ற பல்வேறு பணிப் பெயர்களில் பணியாற்றி வந்தனர். இவர்க ளது கல்வித் தகுதி டிப்ளோமா, இன்ஜினியரிங் முதல் எம்.இ., வரையாகும். அரசாணை தேதி 5.3.2020 மற்றும் கடிதங்கள் தேதி  14.6.2021 மற்றும் 30.7.2021 அரசாணையின் படி 178 பேர்  அரசினர் பொறியியல் கல்லூரி களில் பணி நிரவல் அடிப்படை யில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் கல்வித் தகுதி, பணிக் கால அனுபவம், பணிப் பெயர் போன்றவற்றை கருத்தில் கொள்ளாமல் ஐ.டி.ஐ. தகுதியி லுள்ள துவக்க நிலை தொழில் நுட்ப பணிகளில் என்ற  அடிப்படையில் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.

இத்தகைய பணி நிரவல் இவர்களுக்கு மிகுந்த மன உளைச்சல் தருவதாக வேதனைப்படுகின்றனர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து பணி நிரவலில்  சென்றுள்ள சுமார் 4500 பேர்களுக்கு இத்தகைய நிலை இல்லை. எனவே, அரசுக்கு எந்த  வித நிதிச் சுமையும் ஏற்படுத்தாத  இவர்களது நியாயமான கோரிக் கையை  உயர்கல்வித்துறை அமைச்சர் நிறைவேற்றித் தர  வேண்டுகிறேன். இது குறித்து  பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் முன்னாள் முதல்வர் ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பலனளிக் கவில்லை எனக் கூறுகின்றனர். எனவே,உயர்கல்வித்துறை அமைச்சர் பரிவோடு இவர்க ளது நிதிச்சுமை இல்லாத கோரிக் கையை நிறைவேற்றித் தர மீண்டும் வேண்டுகிறேன். அமைச்சர் க.பொன்முடி: அண்ணாமலைக் பல்கலைக் கழகம் தனியாரிடம் இருந்த போது கடந்த காலங்களில் அதிகமாக பணி நியமனங்கள் நடந்துள்ளது. அந்த பல்கலைக் கழகத்தை அரசே ஏற்றப்பிறகு, மறு ஆய்வு செய்திருக்கிறோம். நிதி சுமையில்லை என்பது தவ றானது. தற்போது அதிகமாக நிதி சுமை இருக்கிறது. ஆனாலும், உறுப்பினர் தெரிவித்திருக்கும் பல்வேறு கோரிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்று வோம்.