states

img

போஷாக் டிராக்கர் மட்டுமே போஷாக்காக உள்ளது குழந்தைகள், ஊழியர்கள் நிலை எதிரிடையாக உள்ளது

அங்கன்வாடி ஊழியர்கள் - உதவியாளர்களும் விவசாயத் தொழிலாளர்களும் சகோதரிகள்

மூன்றாவது நாள் மாநாட்டை வாழ்த்தி விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர்          பேசியதாவது:- இந்தியாவின் ஆரோக்கியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் - லட்சக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றும் பணியில் உள்ளீர்கள். பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகள் உங்களின் பங்களிப்பை மட்டுமல்ல, குழந்தைகள் நலத்திட்டங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதில் உறுதியாக உள்ளது. ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய அரசு சர்வாதிகாரப் பாதையில் பயணித்து வருகிறது. மோடி அரசு உழைப்பாளி மக்களைப் பற்றியோ குழந்தைகளைப் பற்றியோ கவலைப்படவில்லை. முதலாளிகளை தனது நண்பர்களாக்கி அவர்களை வளப்படுத்துவதிலேயே குறியாக உள்ளது. 

 அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் பல மாநிலங்களில் சில கோரிக்கைகளில் வெற்றியை ஈட்டியுள்ளது. அங்கன்வாடிகளை பாதுகாக்க வேண்டும். குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும்.  அரசு ஊழியர்களாக அங்கீகரித்து காலமுறை ஊதியம் வழங்கவேண்டுமென்ற உங்கள் போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர்கள் துணை நிற்பார்கள் என்றார். 2023-ஏப்ரல் 5-ஆம் தேதி தில்லி நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்களின் பிரம்மாண்டப் பேரணி நடைபெறுகிறது. இதில் தமிழகத்திலிருந்து பெருவாரியான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தப் பேரணி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதும் என்பது உறுதி. விவசாயத் தொழிலாளர்களின் ஒரு அங்கமாக நீங்கள் உள்ளீர்கள். ஏனெனில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கிராமப்புற உழைப்பாளி மக்களின் கோரிக்கைகளுக்காகப் போராடுகிறது. அந்த உழைப்பாளி மக்களின் குழந்தைகளின் வளர்ச்சிக்காகவும், அறிவுக்கூர்மைக்காகவும்  அர்ப்பணிப்பு மிக்க பணியைச் செய்துவருகிறீர்கள் என்றார்.

அவரது உரையைத் தொடர்ந்து நமது செய்தியாளரிடம் பேசிய மாநாட்டுப் பிரதிநிதி ஒருவர், அங்கன்வாடி ஊழியர்களும் உதவியாளர்களும் வாய்ப்புள்ள பகுதிகளில் விவசாயத் தொழிலாளர்கள் அமைப்பை உருவாக்கி வருகிறார்கள். பல மாநிலங்களில் நாங்களும்-விவசாயத் தொழிலாளர்களும் இணைந்தே செயல்படுகிறோம்.

மதுரை,டிச.8- போஷாக் டிராக்கர் மட்டுமே  போஷாக்காக உள்ளது. ஊழியர் களோ, உதவியாளர்களா போஷாக் காக இல்லை. மற்றொருபுறத்தில் குழந்தைகளுக்காக வழங்கப்படும் ஊட்டச்சத்துகளும் படிப்படியாக வெட்டப்படுகின்றன. ஊட்டச்சத்தை குறைப்பதுதான் போஷாக் டிராக்க ரின் நோக்கமல்ல ஒன்றிய அரசின்  நோக்கமாக உள்ளது என அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்கள் அமைப்பின் பத்தாவது அகில இந்திய மாநாடு கூறியுள்ளது. அமைப்பின் 10-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் மூன்றா வது நாளாக வியாழனன்று தொடர்ந்தது.  மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

போஷாக்  டிராக்கர் செயலியின் நோக்கம் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை கண்காணிப்பதாகும். ஆனால் போஷாக் டிராக்கர் அங்கன்வாடி பணியாளர்களை துன்புறுத்துவதாக மாறியுள்ளது.   குழந்தைகளின் போஷாக்கை அதிகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட அங்கன்வாடி மையங்களில் போஷாக்கின்மையே உள்ளது. செல்போன் ரீ சார்ஜ் கட்டணம்  சந்தைக் கட்டணத்தின் அடிப்படையில் கொடுக்கவேண்டும். நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய செல்போன்கள் வழங்க வேண்டும். போஷாக்  டிராக்கர் இணையதளத்தை பிராந்திய மொழிகள் இடம்  பெறவேண்டும். தரவு கள் பதிவேற்றத்தில் தவறுகள் நிகழ்ந்தால் அதை திருத்தம் செய்யும்  வாய்ப்பை அங்கன்வாடி ஊழியர் களுக்கு கொடுக்கும் வகையில் தரவு  தளத்தை மாற்றியமைக்க வேண்டும். மினி அங்கன்வாடி மையங்களை முழு அங்கன்வாடி மையங்களாக தரம்  உயர்த்த வேண்டும். மினி தொழிலா ளர்களை அங்கன்வாடி பணியாளர் களாக அங்கீகரிக்க வேண்டும். மினி மையங்களுக்கு உதவியாளர்கள் நியமிக்கவேண்டும். பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதி யம் வழங்க வேண்டும். குறை தீர் குழுவில் அனைத்து நிலைகளிலும் மினி தொழிலாளர்கள் இணைக்க வேண்டும்.

அங்கன்வாடி உதவியாளர்கள் பதவி உயர்வுக்கு வயது வரம்பு நிர்ண யம் செய்யக்கூடாது. கேஸ் சிலிண்டர் களுக்கு அவ்வப்போது நிர்ணயிக்கும் சந்தை விலையை வழங்கவேண்டும். சிலிண்டர்கள் வழங்காவிட்டால், சந்தை விலையின் அடிப்படையில் எரி பொருள் கட்டணம் வழங்கவேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி உச்சநீதி மன்ற உத்தரவின் அடிப்படையில் பணிக்கொடை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூலித்தொழிலாளர்களாக...

ஐசிடிஎஸ் என்பது ஒரு “ஸ்தாப னம்”. அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்கள் சட்டப்பூர்வமானவை என  உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது. இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ‘கௌரவ ஊதியம்’ என்று அரசு கூறினாலும், கூலித் தொழிலாளர்களாகவே பார்க்கப்படுகின்றனர்.  இந்த நிலை உடனடியாக போக்கப்படவேண்டும் என்றார் அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஆர்.வி.சிந்து. 

மனிதனின் நரம்பு மண்டலமும்...  அங்கன்வாடிகளும்...

மதுரையில் நடைபெற்றுவரும் அங்கன்வாடி ஊழியர் உதவியாளர் சம்மேளனத்தின் 10-ஆவது அகில  இந்திய மாநாட்டை வாழ்த்தி தமிழ்  நாடுவிவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பெ.சண்முகம் பேசினார். அப்போது, “மனிதனுக்கு நரம்பு மண்டலம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் நாட்டின்  எதிர்கால சந்ததியினரை போஷாக்கு உள்ளவர்களாக மாற்றும் பணியில் ஈடு பட்டு வரும் அங்கன்வாடி ஊழியர்கள் நாட்டின் நரம்பு மண்டலமாக பணி யாற்றி வருகிறார்கள். குழந்தைகள் நலத்திட்டங்களுக் கான நிதி 2020-2021-ஆம் ஆண்டில் 30 சதவீதம் வெட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு பல  லட்சம் கோடி கடன் வழங்கப்படுகிறது. கொடுத்த கடனும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இரத்தச்சோகை, ஊட்டச்சத்து குறைவின்மை, எடையின்மை, வளர்ச்சியின்மையால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். குழந்தைகளின் நலனை விட கார்ப்பரேட்களின் நலன் தான் மோடி அரசுக்கு முக்கியம். குழந்தைகளை அறிவுக் கூர்மையுள்ளவர்களாக மாற்றிவரும் அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குழந்தைகளின் நலத்திட்டத்தை வலுவுள்ளதாக்க பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.