states

தரமற்ற செல்போன்: அரசிடமே ஒப்படைக்கும் அங்கன்வாடி ஊழியர்கள்

சென்னை, ஜூன் 28- அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கிய செல்போன்கள் தரமற்ற தாக உள்ளதால் வரும் புதன்கிழமை  (ஜூன் 29) திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாக தமிழ்நாடு  அங்கன்வாடி ஊழியர் மற்றும்  உதவியாளர் சங்கம் அறிவித் துள்ளது. இதுகுறித்து மாநிலச் செயலா ளர்கள் பி.சித்ரசெல்வி, எஸ்.ஹேம பிரியா ஆகியோர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: கேஸ் சிலிண்டர் வாங்கும் பில் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 3 வருடம் பணி முடித்த மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஏற்கனவே சிறிய  மையத்தில் இருந்து பிரதான மையத்திற்கு பதவி உயர்வில் சென்ற ஊழியர்களுக்கு 10 ஆண்டு களுக்கான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு அனுபவம் மிக்க அங்கன்வாடி ஊழியர்களை ஆசிரியர்களாக நிய மிக்க வேண்டும். உணவு செலவினங் களுக்கு முன் பணமாக 10,000 ஆயிரம்  ரூபாய் வழங்க வேண்டும். பணி  ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்க ளுக்கும் உதவியாளர்களும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணிக்கொடை ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும். சில்லறை செல வினத்திற்கு என 200 ரூபாய் வழங்க  வேண்டும் பயணப்படி 400 ரூபாய்  வழங்க வேண்டும். சரியான எடைக் கருவிகள் வழங்க வேண்டும். பணி களை வரன்முறைப்படுத்த வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (ஜூன் 30) சென்னை தரமணியில் உள்ள இயக்குனர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இச்சந்திப்பின் போது மாவட்டத் தலைவர் கே.நிர்மலா, செயலாளர் ஸ்ரீதேவி, பொருளாளர் விஜயலஷ்மி ஆகியோர் உடனிருந்தனர்.