சென்னை, ஏப்.27- தஞ்சாவூரில் கோவில் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் இறந்த நிகழ்வு குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். சப்பரம் இழுக்கும் சம்பவத்தின் போது முன்எச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப் பட்டிருக்க வேண்டும். சாலை செப்பனிடப் பட்டிருக்க வேண்டும். ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த முன்எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார். மேலும், இந்த சம்பவத்தில் அரசு உரிய பாதுகாப்பு வழங்காததை கண்டித்து வெளிநடப்பு செய்வதாவும் கூறி னார்.
இதைத்தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளி நடப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வ பெருந்தகை பேசினார். அப்போது, ‘கும்பகோணம் மகாமகம் குளத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குளித்த நேரத்தில் 44 பேர் மரணமடைந்த சம்பவத்தை யும் இதுசம்பந்தமாக அன்றைய தினம் சட்டப்பேரவையில் ஜெயலலிதா பேசியது அவைக் குறிப்பில் இடம்பெற்றதை அப்படியே வாசித்துக் காட்டினார். அவரைத் தொடர்ந்து மற்ற கட்சித் தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், வெளிநடப்பு செய்த அதிமுக வினர் மீண்டும் அவைக்குள் வந்தனர். திரும்பவும் பேசுவதற்கு எடப்பாடி வாய்ப்பு கேட்டார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ‘அங்கு நடைபெற்ற திருவிழாவில் தேர் இழுக்கப்படவில்லை. சப்பரம் தான் இழுக்கப்பட்டது. எதிர்க்கட்சி கள் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கூற வேண்டும் என்பதற்காக சொல்லக்கூடாது. இந்த துயர சம்பத்தை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடவேண்டாம். ஆக்கப்பூர்வ மான கருத்துக்களை சொல்லுங்கள்”என்றார்.
இதனால் ஆவேசமடைந்து கோபத்தின் உச்சிக்கு சென்ற எடப்பாடி அமைச்சர் சேகர்பா வுவை கை நீட்டி ஒருமையில் பேசினார். அவருக்கு ஆதரவாக அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. பேரவைத் தலைவர் பலமுறை எச்சரிக்கை செய்தும் பலனில்லை. தங்களது இருக்கைகளை விட்டு பேரவைத் தலைவரின் இருக்கையை முற்று கையிட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் தரையில் அமர்ந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். அப்போதும் பேரவைத் தலைவர் பலமுறை எச்சரித்தும் அவர்களது இருக்கைக்கு செல்ல மறுத்து அவை நிகழ்ச்சிகளுக்கு குந்தகம் விளைவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு உத்தரவிட்டார். உடனடியாக சபைக்காவலர்கள் அதிமுக உறுப்பி னர்களை வெளியேற்றினர். சிலர் வெளியேற மறுத்ததால் அவர்களை சபைக் காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். அப்போது, கே.பி. முனுசாமி, கோவந்த சாமிக்கும், அமைச்சர் மூர்த்திக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் சுமார் 20 நிமிடம் பேரவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.