சென்னை, ஏப்.16- தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வரு கின்றன. அவற்றில் சுமார் 53 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். நிகழ் கல்வி யாண்டுக்கான (2022-2023) இறுதி வேலை நாள் ஏப்ரல் 28-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில், ‘‘அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே தொடங்குவதற்கான பணி கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. அந்த வகையில் ‘அரசுப் பள்ளிகளைக் கொண் டாடுவோம்’ என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வுப் பேரணி ஏப்ரல் 17 முதல் 28-ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படவுள்ளது. இந்தப் பேரணிக்காக தயாரிக்கப்படும் பிரத்யேக வாகனத்தில் பள்ளிக் கல்விக் கான அரசின் திட்டங்கள், கற்றல்-கற்பித்தல் செயல் பாடுகள், மன்ற செயல்பாடு கள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெறும். இந்தப் பேரணியில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்க வுள்ளனர். 1 முதல் 9- ஆம் வகுப்புகளில் தங்களது குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் அருகே உள்ள அரசுப்பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாகப் பதிவு செய்து கொள்ளலாம். இதற் கான விரிவான வழிகாட்டுதல் கள் பள்ளிகளுக்கு ஓரிரு நாள் களில் வழங்கப்படும்’’ என பள்ளிக் கல்வித்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.