states

அரசு நிர்ணயித்ததை விட கல்லூரிகளில் கூடுதல் கட்டணம்

சென்னை, ஜூன் 22- கல்லூரிகளில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், அரசு  உதவி பெறும் பாடப்பிரிவுகள் மற்றும் அரசு உதவி இல்லாத பாடப்பிரிவுகள் என இரண்டு முறையான பாடப்பிரிவு கள் காலை மற்றும் மாலையில் நடந்து வருகின்றன. இதில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு மாணவர்களிடம் பெற வேண்டிய கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ளது. இந்த கல்விக் கட்டணமாக அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும் பொருந்தும். ஆனால் அரசு உதவி பெறும் பெரும்பா லான கல்லூரிகள் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு தங்களின் வசதிக்கு ஏற்ப கல்விக் கட்டணத்தை தாங்களே அரசின் எவ்வித அனு மதியும் பெறாமல் நிர்ணயித்துக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது.

12 ஆம் வகுப்பை முடித்து வெளி வரும் மாணவர்களுக்கு அரசு கல்லூரி களில் இடம் கிடைக்காத போது, தங்களின் பொருளாதார சூழ்நிலையை மீறி அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் சேரு கின்றனர். சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதலாக வருவதாக புகார் எழுந்து ள்ளது. இளங்கலை பட்டப் படிப்புக்கு வருடத்திற்கு ரூ.1000 லிருந்து 1500 ஆக அரசின் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கல்லூரி வருடத்திற்கு ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 80 ஆயிரம் வரை  கல்வி கட்டணம் பெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. தற்போது அந்தக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடுத்திருக்கின்றனர். அந்த மனுவில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்ட ணத்தை விட அதிகமாக சென்னை வேள ச்சேரியில் உள்ள அந்தக் கல்லூரி வசூ லித்ததாகவும், அதை திரும்ப அளிக்கு மாறும் தெரிவித்துள்ளனர். அந்த மனுவை விசாரித்து 20.06.2023 அன்று நீதிபதி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கல்லூரி மண்டல இயக்குநர், சம்பந்தப் பட்ட கல்லூரி மற்றும் மாணவர் களிடம் விசாரணை நடத்த ஆணை யிட்டுள்ளார்.