states

செயல்படாத பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்க நடவடிக்கை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி

திருப்பூர்,நவ.8-  செயல்படாத பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று பால் வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.  திருப்பூர் வீரபாண்டி பிரிவு ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றிய வளாகத் தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நவம்பர் 8 வெள்ளிக் கிழமையன்று ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறுகையில், தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை ரூ. 25  கோடியை தொட்டுள்ளது. பால் மட்டு மின்றி நெய், பால்கோவா, இனிப்பு வகைகள், மிக்சர் மற்றும் பனீர், ஐஸ்கிரீம் என பல்வேறு பொருட்களை ஆவினில் உரிய தரத்தில் தருகிறோம். கோவையில் ஆவின் பனீர் பிரத்யேக விற்பனை மையத்தை திறக்க உள்ளோம். இவை அனைத்தும் பொது மக்களின் நன்மைக்காகத்தான். ஆவின் இருப்பதால் தனியார் நிறுவனங்கள் பால் விலையை கட்டுப்பாடின்றி உயர்த்தாது. தமிழகத்தில் பால் விற்பனையை 6 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளோம். திரு நெல்வேலி போன்ற பெரிய மாவட்டங் களில் பால் உற்பத்தி குறைவாக இருப்பது தொடர்பாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரு பக்கம் விவசாயிகள், மற்றொரு பக்கம் நுகர்வோர் என இரண்டு தரப்பை யும் பார்க்க வேண்டியுள்ளது. உடன டியாக நுகர்வோரிடம் விலையைக் கூட்ட  முடியாது. விவசாயிகளிடம் குறைவான விலைக்கும் பால் கொள்முதல் செய்ய  முடியாது. தமிழகம் முழுக்க செயல்  படாமல் இருக்கும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.