states

அரசு நிலங்கள் அபகரிப்பை தடுக்க சட்டம்

சென்னை, செப். 25- அரசு நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப் படுவதை தடுக்க தகுந்த சட்டத்தை இயற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, கோயம்பேடு ஒட்டி இருக்கும் அமைந்தகரை தாலுகா, பூந்த மல்லி சாலையில் அரசுக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்துக்கு சதுர அடி ரூ. 13 ஆயிரத்து 500 என குறைந்த தொகைக்கு ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து, 2022 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி திருத்திய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து பாஷ்யம் நிறுவனம் சார்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணி யம் முன்பு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு கோரிக்கையை நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அரசு நிலத்தை முழுமையாக மீட்டு, வேலி அமைத்து, பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். அதிக மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரிக்க உடந்தையாக செயல்பட்ட அரசு ஊழியர்கள், பொது ஊழியர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலத்தை அபகரிக்க திட்ட மிட்டதை ஊழல் நடவடிக்கையாக கருத்தில்  கொண்டு, அரசு நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதை தடுக்க தகுந்த சட்டத்தை இயற்றுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். அபகரிக்கப்பட்ட அரசு  நிலங்களை அடையாளம் காண வேண்டும். அரசு நிலங்கள் சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்தது குறித்தும், குத்தகை பாக்கி வசூலிப்பது குறித்தும் ஆய்வு செய்ய உயர் மட்ட குழுவை அமைக்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.