states

செஸ், சர்சார்ஜ் கொள்ளையை திரும்பப் பெற்றிடுக!

சிபிஎம் மாநிலக் குழு வலியுறுத்தல்

சென்னை,மே 26- பெட்ரோல்-டீசல் விலைக் குறைப்பு ஒன்றிய  அரசின் நாடகமே என்று சாடியுள்ள மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி, வரியை உயர்த்தும் கொள்கை யை முற்றாக கைவிட வேண்டும். செஸ், சர்சார்ஜ் கொள்ளையை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு கூட்டம் மே 24-25 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்  திற்கு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி தலைமை வகித்தார். அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தி யக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் உள்ளிட்டு  மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் இரண்டாவது நாளில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  சில நாட்களுக்கு முன்பாக, ஊடகங்களை சந்தித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தா ராமன், பெட்ரோல்-டீசல் மீதான வரிகளை சிறு  அளவில் குறைத்ததுடன், மாநிலங்களும் தங்  கள் வரியை குறைக்க வேண்டும் என்று பேசி யிருந்தார். கடுமையான விலையேற்றத்தை தாங்க முடியாத வேதனையில் இருந்த மக்க ளுக்கு, இந்த அறிவிப்பினால் சற்று ஆறுதல் ஏற்பட்டாலும், இது ஒரு ஏமாற்று நாடகமே என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.

ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடை பெற்ற 137 நாட்களை தவிர்த்து, கடந்த சில மாதங்களில் ஒவ்வொரு நாளும் சிறுகச் சிறுக விலையை ஏற்றி, 112 ரூபாயை கடந்தது பெட்ரோல் விலை. டீசல் மீதான வரி ரூ.3 என்ற  அளவில் இருந்தது, மோடி ஆட்சிக் காலத்தில்  படிப்படியாக உயர்த்தப்பட்டு ரூ.32 ஆகி, பெட்ரோல் விலையோடு சமன் செய்யும் அள வுக்கு உயர்ந்தது.  இப்போது, உயர்த்தியதில் ஒரு சிறு பகுதி யை குறைத்துவிட்டு, அதை மக்களின் மீதான கரிசனமாக முன் வைப்பது மோடியின் ஏமாற்று நாடகமே. இதே காலகட்டத்தில் சமையல் எரி வாயுவின் விலை ரூ.53-க்கும், வாகனங்கள் பயன்படுத்தும் எரிவாயு ஒரு லிட்டரின் விலை  ரூ.8-க்கும் உயர்த்தப்பட்டுள்ளதுடன், பெட்ரோல்-டீசல் மொத்த விற்பனையின் விலை யும் உயர்ந்துள்ளது.

விலை உயர்வு இருக்காதா?

பெட்ரோல்-டீசல் மீதான வரிகளை உயர்த்தி யதன் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் ஒன்றிய அர சாங்கம் திரட்டிய நிதி ரூ.26 லட்சம் கோடி  ஆகும். ஆனால், இப்போது மேற்கொண்டிரு ககும் விலை குறைப்பினால் ரூ.1 லட்சம் கோடி கள் முதல் ரூ.2 லட்சம் கோடிகள் வரை வரு வாய் இழப்பு ஏற்படும் என்று முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீத்தா ராமன். ஆனால் வரும் ஆண்டுகளில் மீண்டும்  விலை உயர்த்தப்படாது என்ற எந்த உறுதியை யும் ஒன்றிய அரசாங்கம் வழங்கிடவில்லை. பெட்ரோலில் 10 விழுக்காடு எத்தனால் கலக்கப்படுகிறது. பெட்ரோல் விலையை விட எத்தனால் விலை குறைவு. இந்த விலை குறைப்பை நுகர்வோருக்கு குறைத்துக் கொடுக்  காமல் பெட்ரோலிய நிறுவனங்கள் கொள்ளை யடிக்க மோடி அரசு அனுமதித்து வருகிறது.

பாஜக அண்ணாமலைக்கு கண்டனம்'

ஆனால், மேற்சொன்ன உண்மைகளை மறைத்து, தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பும் முயற்சியில் பாஜக தலைவர் அண்ணா மலை இறங்கியிருக்கிறார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மக்கள் மீது உண்மையிலேயே மோடி அர சுக்கு அக்கறை இருக்குமானால், ஒன்றிய அர சுக்கு மட்டுமான சிறப்பு கலால் வரி, செஸ்  மற்றும் சர்சார்ஜ் ஆகிய வருவாய் இனங்களில், மோடி அரசு செய்த அநியாய உயர்வு அனைத்  தையும் முற்றாக விலக்கிக் கொள்ள வேண்டும். வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலைக் கொள்ளையை கைவிட வேண்டும். பொதுப் போக்குவரத்திற்கான செலவுகளை உயர்த்தக்கூடிய விலைக் கொள்கையையும் கைவிட வேண்டும் . 

காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியை விரைந்து முடித்திடுக! 

காவிரி டெல்டா பாசனத்திறகாக மேட்டூர் அணை மே 24 ஆம் தேதி தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறுவை சாகு படிக்கான இயல்பான பரப்பளவை தாண்டி கூடு தலாக இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது. இந்த  நிலையில் டெல்டா மாவட்டங்களில் நடை பெற்று வரும் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக முடிக்க வேண்டும்.  தேவையான அளவு விதை, ரசாயன உரம், பயிர்க்கடன் உட்பட விவசாயிகளுக்கு தடை யில்லாமல் கிடைப்பதை தமிழக அரசு உறு திப்படுத்திட வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.