states

உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி போராட்டத்தில் ஒரு பின்னடைவு: முதலமைச்சர்

சென்னை,நவ.7- “பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்ச  நீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூக நீதியை வென்றெ டுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில்  ஒரு பின்னடைவு” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு  செல்லும் என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள்  கொண்ட அமர்வு செவ்வாயன்று (நவ.7) தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து திமுக தலைவர்  மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய  வகுப்பினர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காக 2019 ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு கொண்டு  வந்த இடஒதுக்கீட்டு முறை சமூக நீதிக்கும், சமத்து வத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படை யில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திமுக  முன்னெடுத்து நடத்தி வந்தது. இந்த வழக்கில் வெளி யாகியுள்ள தீர்ப்பு, சமூக நீதியை வென்றெடுப் பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது. எனினும், தீர்ப்பை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூக  நீதிக்கு எதிரானதான முன்னேறிய வகுப்பினருக் கான இந்த இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும். சமூக நீதியைக் காக்க முதல் அரசியல் சட்டத்  திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணி லிருந்து, சமூக நீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி  ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்பு கள் ஒருங்கிணைய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“உயர் சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும்  என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமான சமூக நீதித் தத்து வத்திற்கு நேர் முரணானது என்றும் மண்டல் குழு தொடர்பான 9 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பி லிருந்து தப்பிக்கவே, இந்த சட்டத் திருத்தம் என்றும்  இதன்மீது சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.