சென்னை, பிப்.11 - சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அரசு சார்பில் வாதாட 39 புதிய வழக்கறி ஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வாதாட கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்க றிஞர்கள், உரிமையியல் மற்றும் குற்ற வியல் வழக்குகளுக்கு அரசு வழக்கறி ஞர்கள் நியமிக்க கடந்தாண்டு டிசம்பர் 20 அன்று ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் எடுத்த முடிவுகளின்படி சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற கிளையில், வேத பகத்சிங், புருஷோத்தமன், செந்தில் முருகன், பரணிதரன், ஹர்ஷா ராஜ் உள்ளிட்ட 8 வழக்கறிஞர்கள் சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப் பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வினி தேவி, சித்தார்த், சரவணன், இந்து பாலா உள்ளிட்ட 7 வழக்கறி ஞர்கள் கூடுதல் அரசு வழக்கறிஞர் களாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றவியல் வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களாக பாஸ்கரன், உதயகுமார் உள்ளிட்ட 7 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர். உமாகாந்த், கருணாநிதி, வெங்கட சேஷய்யா உள்ளிட்ட 16 வழக்கறி ஞர்கள், உரிமையியல் தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பு வழக்கறி ஞர்களாக ஆஜராவார்கள் என தெரி விக்கப்பட்டுள்ளது. வரி தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பில் அஜாராக வழக்கறிஞர் செல்வி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தம் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 39 புதிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நிய மிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு வழக்கு களில் அரசு தரப்பிற்கு ஆஜராகி வாதாடு வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.