துருக்கியில் கடந்த 66 மணி நேரத்தில் 37 முறை அடுத்தடுத்து நில நடுக்கங்கள் ஏற்பட் டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள் ளது. சனியன்று 5.5 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள் ளது. சுமார் 10 கிமீ ஆழத் தில் ஏற்பட்ட நிலநடுக் கத்தால் பெரியளவு பாதிப்பு ஏற்படவில்லை என தகவல் வெளியாகி னாலும், பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து அடிக் கடி நிலநடுக்கம் ஏற்படு வதால் அந்நாட்டு மக்கள் தினமும் பயம் கலந்த உணர்வுடனேயே நாட் களை கடந்து வருகின்ற னர்.
ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் மார் பர்க் வைரஸ் (எபோலா குடும்பம்) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு வருக்கு பாதிப்பை ஏற் படுத்தியுள்ளது. எபோ லாவை போலவே உயி ரிழப்பை ஏற்படுத்தும் மார்பர்க் வைரஸ் கானா, ஈக்குவடோரியல் கினியா ஆகிய நாடுகளில் கடு மையான சேதத்தை ஏற் படுத்தியுள்ளது. மார்பர்க் நோய் பாதிப்பு ஏற்பட் டால் இறப்பு விகிதம் 88% வரை இருக்கலாம் என வும், சிகிச்சையளிக்க மருந்துகள், தடுப்பூசிகள் என எதுவும் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகச் செய்திகள்
தெற்கு சூடானின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டி ருக்கிறது. 2022 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்து வந்த தெற்கு சூடான், நடப்பாண்டில் ஒரு நாளைக்கு 1 லட்சத்து 40ஆயிரம் பீப்பாய்கள் மட்டுமே உற்பத்தி செய்கிறது. நாட்டின் வடக்குப்பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம்தான் இதற்குக் காரணமாகும். பல சாலைகள் தண்ணீரில் மூழ்கிக்கிடக்கின்றன. அதனால் போக்குவரத்தும்பாதிக்கப்பட்டுள்ளது என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் புவோட் காங் சோல் தெரிவித்துள்ளார்.
பண மோசடிகளில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலில் இருந்து கம்போடியாவை நீக்கியிருக்கிறார்கள். பாரிஸ் நகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள நிதி மோசடி தடுப்புப்படை, தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவை 2019 ஆம் ஆண்டில் இந்தக் கறுப்புப் பட்டியலில் சேர்த்திருந்தது. அதன் பிறகு, பணப்பரிமாற்ற விவகாரங்களில் பெரும் முன்னேற்றத்தை கம்போடியா பெற்றிருப்பதால் அந்தப் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டிருக்கிறது.
சோயுஸ் எம்.எஸ் - 23 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய தாக ரஷ்யாவின் அரசு விண்வெளிக் கழகமான ரோஸ்காஸ் மாஸ் அறிவித்திருக்கிறது. கஜகிஸ்தானில் உள்ள பைகானுர் தளத்தில் இருந்து இந்த விண்கலத்தை ஏற்றிக் கொண்டு சோயுஸ் 2.1ஏ ராக்கெட் வீண்ணில் பறந்தது. திட்டமிட்டபடி அதன் வட்டப் பாதையில் விண்கலத்தை அந்த ராக்கெட் சேர்த்தது. விண்வெளி யில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்னும் இரண்டு நாட்களில் சோயுஸ் எம்.எஸ் - 23 சென்றடையும்.