மாட்ரிட், ஜூன் 28- ஸ்பெயின் நகரமான மெலில்லாவிற்குள் நுழைய முயன்ற 23 ஆப்பிரிக்கக் குடிமக்கள் உயிரி ழந்தது பற்றி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை கள் எழுந்துள்ளன. ஜூன் 24 ஆம் தேதியன்று மொரோக்காவின் எல்லை வழியாக ஸ்பெயின் நகரம் மெலில்லா வுக்குள் நுழைய 2 ஆயிரம் பேர் முயற்சி செய்தி ருக்கிறார்கள். இந்நிலையில் மொரோக்கா காவல் துறையினர் தலையிட்டனர். மக்களை அவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். உள்ளே நுழையும் அவர்கள் முயற்சி மேலும் உயிர்களைப் பறிக்கும் என்று காவல்துறையினர் கரு தினர். அவர்களின் தலையீட்டையும் மீறி 130 பேர் வேலிகளைத் தாண்டி ஸ்பெயினுக்குள் நுழைந்த னர். வேலிகளைத் தகர்த்து உள்ளே நுழையும் அவர்களின் முயற்சியின்போது ஏராளமானோர் காய மடைந்தனர். காயமடைந்தவர்களில் 23 பேர் தங்கள் உயிரையும் இழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசா ரிக்குமாறு தொண்டு நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.