நாகாலாந்தில் முதல்முறையாக 2 பெண் எம்எல்ஏக்கள்!
1963ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் உருவானதில் இருந்து இதுவரை 13 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதுவரை ஒருமுறை கூட பெண் ஒருவர் வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக சட்டப்பேரவைக்குள் நுழைந்ததில்லை. இந்நிலை யில், திமாபூர்-3 தொகுதியில் ஹேகானி ஜாகாலூ, மேற்கு அங்காமி தொகுதியில் சல்ஹொடி யூனோ குரூஸ் ஆகிய 2 பெண்கள், ஆளும் என்டிபிபி கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளனர். இது நாகாலாந்து சட்டப்பேரவையின் வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது.
உண்மை வெல்லும்: சொல்பவர் அதானி
அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை செபி (SEBI) ஆணையம் 2 மாதத்திற்குள் விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் வியாழனன்று உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த உத்தரவை உடனடியாக வரவேற்று டுவிட்டரில் பதிவிட்ட கவுதம் அதானி, “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அதானி குழுமம் முழு மனதோடு ஏற்கிறோம்; விரைவில் இப்பிரச்சனைக்கு நிறுவனம் தீர்வை கொண்டு வரும். இறுதியில் உண்மை வெல்லும்” என குறிப்பிட்டுள்ளார்.
2024 நாங்கள் வென்றால் ரூ.500க்கு சிலிண்டர்: காங்கிரஸ்
“நாங்கள் ஓர் உறுதிமொழியை எடுத்திருக்கிறோம். இதன்படி, 2024-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ. 500-க்கு விற்பனை செய்யப்படும். அதற்கு மேல் விலை அதிகரிக்க காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது. ரூ. 500க்கு மேல் உள்ள எந்தவொரு விலையும் பணவீக்கம் மற்றும் ஜிடிபி வளர்ச்சிக்கு தீங்கு ஏற்படுத் தும்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான பேராசிரியர் கவுரவ் வல்லப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதானி விவகாரத்தில் தேவை கூட்டுக் குழு விசாரணையே!
அதானி மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து, செபி விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், “நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையைத் தவிர மற்ற எந்தவொரு குழுவினாலும் அதானி விவகாரம் தொடர்பான உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர முடியாது” என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. “உச்ச நீதிமன்றத்தால் செபி குறித்தும் அதன் சட்டவிதிகள் குறித்தும் மட்டுமே விசாரிக்க முடியும். அதானி விவகாரத்தில் உண்மை என்ன என்பதனை அதனால் வெளிச்சத்திற்கு கொண்டுவர முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டெண்ட் பொருத்திக் கொண்ட நடிகை சுஷ்மிதா சென்!
முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென், தனக்கு ஒரு சில நாட் களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்ஜியோபிளாஸ்டி அறுவைசிகிச்சை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள சுஷ்மிதா சென், “உங்கள் இதயத்தை மகிழ்ச்சியுடனும் ஊக்கத்துடனும் வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அது உங்களுக்கு எப்போது தேவைப்படுமோ அப்பொழுது உங்களுடன் துணை நிற்கும். (எனது தந்தை சென்சுபிரின் அற்புதமான வார்த்தைகள்)” என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தாலி பிரதமருக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு!
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அரசு முறைப் பயணமாக வியாழனன்று காலை இந்தியா வந்தார். அவரை தில்லி விமான நிலையத்தில் சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பவார் வரவேற்றார். பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகையில் மெலோனியை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இத்தாலி பிரதமருக்கு முப்படைகளின் மரியாதை அளிக்கப்பட்டது. இத்தாலிய பிரதமருடன் துணைப் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனியோ தாஜானி மற்றும் வணிகக் குழுவினரும் இந்தியா வந்துள்ளனர்.
அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு பணிந்தது கர்நாடக அரசு!
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கர்நாடக மாநிலத்தில் அரசு ஊழி யர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் துவங்கிய நிலையில், அம்மாநில பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு, போராட்டத்திற்கு பணிந்தது. ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்படும் என்றும், இடைக்கால நிவாரணமாக 17 சதவிகித ஊதிய உயர்வு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். எனி னும், 7-ஆவது ஊதியக் குழு மற்றும் என்பிஎஸ் மீதும் உத்தரவு பிறப்பிக்காத வரை, போராட்டத்தை வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
3 ஆயிரம் கோயில்களை கட்டுகிறது ஆந்திர அரசு
“ஆந்திராவில் இந்து மத நம்பிக்கையை பாதுகாக்க வும், பரப்பவும் 3,000 கோயில் கள் கட்டமைக்க திட்டமிடப் பட்டு உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ‘ஸ்ரீவாணி அறக்கட்டளை’ கோவில்கள் கட்டுவதற்காக தலா ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. 1,330 கோயில் களின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அது தவிர, மேலும் 1,465 கோயில் கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு சில சட்டப்பேரவை உறுப்பி னர்களின் கோரிக்கையின் பேரில் மேலும்200 கோயில் கள் கட்டமைக்கப்படும். கோயில் கட்டும் திட்டம் தன் னார்வ தொண்டு நிறுவனங்க ளின் ஒத்துழைப்புடன் செயல் படுத்தப்படும்” என்ற ஆந்திர அறநிலையத் துறை அமைச்சரும், துணை முதல் வருமான கோட்டு சத்திய நாராயணா அறிவித்துள்ளார்.
மேதா பட்கர் வருகை: ஏகனாபுரத்தில் காவலர்கள் குவிப்பு
காஞ்சிபுரம், மார்ச் 2- சென்னையின் 2 ஆவது விமான நிலை யம் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைய உள்ளது.இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த புதிய விமான நிலையத்திற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களிலிருந்து நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலானவை விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதி கள் என்பதால் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களும் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலைய அறிவிப்பு வந்தது முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டத்துக்கு பல்வேறு அரசி யல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். புதிய விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில், கிராம மக்களின் போராட்டத்திற்கு சமூக ஆர்வலர் மேதா பட்கர் ஆதரவு தெரிவித்திருக் கிறார். எனவே, அவர் ஏகனாபுரம் கிராமத்திற்கு வருதாக கூறப்படுகி றது. இதைத்தொடர்ந்து ஏகனாபுரம் பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட் டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலிருந்தும் கூடுதல் காவலர்கள் வரவழைக்கப் பட்டிருக்கிறார்கள். ஏகனாபுரம் கிராமத்திற்கு செல்லும் அனைத்து பாதைகளிலும் காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைத்துள்ளனர். மேலும், விமான நிலைய எதிர்ப்பாளர் களை கண்காணித்து வருகின்றனர்.
வரத்து அதிகரிப்பால் கோயம்பேட்டில் குவியும் திராட்சை
சென்னை,மார்ச் 2- தமிழ்நாட்டில் திராட்சை பழ சீசன் தற்போது தொடங்கியுள்ளது. திண்டுக் கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் கோயம்பேடு பழ மார்கெட்டுக்கு திராட்சை பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இதே போல், மராட்டிய மாநிலம் சோலாப் பூரிலிருந்து 10 முதல் 12 லாரிகளில் சுமார் 150 டன் வரை திராட்சை பழங்கள் தினசரி குவிந்து வருகிறது. இதில் சோனா எனப்படும் விதையில்லா பச்சை திராட்சை அதிகளவில் குவிந்து வருவதால் அதன் விலை வீழ்ச்சியடைந் துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவ தால் திராட்சை பழங்கள் விற்பனை யும் சூடுபிடித்துள்ளது. பன்னீர் திராட்சை கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. இதேபோல் விதையில்லாத கருப்பு திராட்சை (கல்பனா) ரூ.90, விதையில்லாத பச்சை திராட்சை (சோனா) ரூ.50, ஜூஸ் திராட்சை ரூ.50, ரெட் குளோப் திராட்சை ரூ.130 விற்பனை யாகிறது. விலை குறைந்துள்ளதால் வியாபாரிகள் அதிக அளவில் திராட்சை கள் வாங்கி விற்பனை செய்கிறார்கள். இதனால் சந்தையில் திராட்சை விற்பனை களைகட்டியுள்ளது.
புழல் சிறையில் புதிய வசதிகள்
சென்னை,மார்ச் 2- புழல் சிறையில் நேர்காணல் செய்தி டும் அறையில் சிறைவாசிகளிடம் உறவினர்கள் பேசுவதற்கு இண்டர்காம் வசதி அமைக்கப்பட்டுள்ளது. சிறை பாதுகாப்பை மேம்படுத் திட 5 நவீன கேமராக்கள் பொறுத்தப் பட்டுள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்ப ரேசன் சார்பில் ஏ.சி., வெல்டிங் மெஷின், ஹோம் அப்ளையன்சஸ் 3 மாத கால பயிற்சியை ஆண் சிறைவாசிகளுக்கு அளிக்கப்பட்டது. தையல் மற்றும் எம்பிராய்டரி பயிற்சி முடித்த பெண் சிறைவாசிக ளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஊடுகதிர் அலகிடும் எந்திரம் ரூ.180 லட்சம் செலவில் கொள்முதல் செய்து நிறுவப்பட்டு இயங்கி வருகி றது. ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி முடித்த 20 சிறைவாசிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறைவாசிகளுக்கு தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக் கழகம் மூலமாக வாய்ப்பாட்டு பயிற்சி மற்றும் இதர இசை கருவிகள் வாசிப்பு பயிற்சி தொடங்கப்பட்டது. கனரக தொழிற்கூட சலவை எந்திரம் சிறைவாசிகளின் பயன்பாட் டிற்கென வாங்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறைவாசிகளால் உருவாக் கப்பட்ட மூலிகை பூங்கா தொடங்கப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டாவோ நிறுவனம் ரூ .100 கோடி முதலீடு
சென்னை,மார்ச் 2- தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய 100 கோடி முதலீடு செய்ய உள்ள தாக மின்வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள டாவோ நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய டாவோ ஈவி டெக்கின் தலைவர் மைக்கேல் லியு, எந்தவொரு மின் இயக்க இரு சக்கர வாகன உற்பத்தியாள ருக்கும் தமிழ்நாடு சந்தை மிகவும் முக்கியமானது என்றார். இதற்கு மூன்று அடிப்படை காரணங்கள் உள்ளன. முதலா வதாக தமிழ்நாட்டின் தலை நகரான சென்னையில் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. இது மும்பை மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களை விட கிட்டத்தட்ட இருமடங்காகும். மின்சார வாகனங்கள் துறை என்பது வளர்ந்து வரும் வணிக மாகும், இது தொழில்நுட்பத்தை விரைவாக ஏற்றுக்கொள்ளும் இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்துகிறது, மேலும் தமிழ்நாட்டில் அதிக இளை ஞர்கள் எண்ணிக்கை உள்ளதால், இம்மாநிலம் இயற்கையாகவே மின்சார வாகனங்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது. சிறந்த கலாச்சாரம் மற்றும் அதன் குடிமக்களின் தர்க்கரீதியான பகுப்பாய்வு காரணமாக டாவோ போன்று எந்த ஒரு எந்தவொரு தரமான தயாரிப்பு வழங்குநரும் இம்மாநில சந்தையில் நுழைய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றார் அவர்.
குமரிக்கடலில் சூறைக்காற்று வீச வாய்ப்பு
சென்னை, மார்ச் 2- குமரிக்கடல் பகுதிகளில் மார்ச் 4, 5 ஆகிய தேதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அந்த நாட்களில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கைவிடுத்திருக்கிறது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 3 அன்று வறண்ட வானிலை காணப்படும். மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் தமிழக மாவட்டங்களில் சனிக்கிழமை (மார்ச் 4) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மகன் விட்டுச் சென்ற பணிகளை தொடருவேன்: இளங்கோவன்
சென்னை, மார்ச் 2- இடைத் தேர்தலில் பெரிய வெற்றி தான் என்றாலும், அதை கொண்டா டும் மனநிலை இல்லை. மகன் விட்டுச் சென்ற பணியை தொடர வேண்டும் என்ற மன நிலையில் தான் உள்ளேன் என்று ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த வெற்றிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் காரணம். அவரைத்தான் இந்த வெற்றி சேரும். தேர்தல் வாக்குறுதிகளில் 80 விழுக் காடு வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். இதற்கு அங்கீகாரமாகத் தான் இந்த வெற்றியை மக்கள் அளித்துள் ளனர். ராகுல் காந்தியின் மீது தமிழ்நாடு மக்கள் வைத்துள்ள அன்புக்கும், ஆதரவுக்கும் இது ஒரு எடுத்துக்காட்டு” என்றார். ஈரோட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் முதல்வரை சந்தித்து விரைவில் நிறைவேற்று வேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டப் பேரவை யில் பங்கேற்பது பெருமையாக உள்ளது என்றும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார். மகன் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற மன நிலையில் தான் உள்ளேன். ஈரோடு மக்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் என்னிடம் கூறிய கோரிக்கை களை நிறைவேற்றுவேன் என்றும் இளங்கோவன் கூறினார்.
உலகச் செய்திகள்
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கங்களால் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தைத் தொட்டு விட்டது. துருக்கியில் மட்டும் 11 மாகாணங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. அந்த மாகாணங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 89 என்று துருக்கி அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில் 6 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் உள்ள நாடான போட்ஸ்வா னாவில் அனைத்து மருத்துவ மற்றும் சுகாதார வசதிகளும் மின்னணு வசதிகள் கொண்டவையாக மாறுகின்றன. இதற்கான திட்டத்தைத் தொடங்கி வைத்த அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் செதோமோ லெலாடிசிட்ஸ்வே, ‘‘குறித்த நேரத்தில் தேவை யான சிகிச்சைத் தருவதற்கு இந்தத் திட்டம் பெரிதளவில் உதவி யாக இருக்கப் போகிறது. மருத்துவ ஆவணங்கள் மின்னணு உருவத்தில் இருக்கப் போவது பல உயிர்களையே காக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் உணவு தானிய உற்பத்தியை அதிகப்படுத்த கூடுதல் விவசாய நிலங்கள் வேண்டும் என்று வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங் உன் கோரியிருக்கிறார். வெள்ளம் மற்றும் புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள வடகொரியாவின் பொருளாதா ரத்தை மீண்டும் உயர்த்த, உணவுப் பொருட்கள் உற்பத்தியை அதி கரிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்ததன் அடிப்படை யிலேயே கிம் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனடிப்படை யில் பாசன கட்டமைப்புகள் உள்ளிட்ட அனைத்து வகையான விவ சாயம் சார்ந்த அம்சங்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள்.