states

3 மாதமாக பொருட்கள் வாங்காத 13 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள்

சென்னை,செப்.7- தமிழ்நாட்டில் 2 கோடியே  60 லட்சம் குடும் அட்டைகள் உள்ளன. ஆதார் எண் விவரம் மற்றும் கைரேகை பதிவு மூலம் இவை கணினி மயமாக்கப்பட்டு செல் போன் எண்களும் இணைக் கப்பட்டுள்ளன. குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள நபர் வந்துதான் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வாங்க முடி யும்.  மற்றவர்களிடம் குடும்ப அட்டையை கொடுத்து அனுப்பி இப்போது பொருட் கள் வாங்க இயலாது. அரசின் இந்த நடவடிக்கை யால் தற்போது போலி குடும்ப அட்டைகள் ஓரளவு கண்டுபிடிக்க முடிகிறது.  குடும்ப அட்டை வைத் திருப்பவர்கள் அத்தியாவ சியப் பொருட்கள் மட்டு மின்றி பொங்கல் இலவச  பொருட்கள் உள்ளிட்ட பல் வேறு நிவாரண உதவிகளும் வழங்கப்படுகிறது. இதனால் குடும்ப அட்டை எல்லா வீடுகளிலும் உள்ளது.  இந்த குடும்ப அட்டைக ளுக்கு ஒரு சில குடும்பத் தில் பொருட்கள் வாங்கு வது கிடையாது. அந்த வகை யில் தமிழ்நாடு முழுவதும் 13 லட்சத்து 12 ஆயிரம் பேர்  கடந்த 3 மாதமாக அத்தி யாவசியப் பொருட்கள் வாங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.  எனவே இந்த குடும்ப  அட்டைதார்கள் பொருட்கள்  வாங்காதது ஏன்? அவை போலி அட்டைகளா? என்பது பற்றி விசாரிக்க உணவுப் பொருள் பாதுகாப்பு துறை ஆணையர் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நியாய விலைக் கடை ஊழியர் கள் கடைசி 3 மாதங்களாக  பொருட்கள் வாங்காத  குடும்ப அட்டைதாரர்க ளுக்கு போன் செய்து என்ன  காரணத்தினால் பொருட்கள் வாங்கவில்லை என்று விசாரித்து பதிவு செய்து அதை மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பி வருகின்றனர்.

;