states

120 எம்எல்ஏ-க்கள், 17 எம்.பி.க்கள் கட்சி மாறி முர்முவுக்கு வாக்களிப்பு!

குடியரசுத் தலைவர் தேர்தலில், திரௌபதி முர்மு எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், இதற்கு 120 எம்எல்ஏ-க்கள் மற்றும் 17 எம்.பி.க்கள் கட்சி மாறி வாக்களித்ததே காரணம் என்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக அசாம்  மாநிலத்தில்தான் 22 எம்எல்ஏ-க்கள் கட்சி மாறி வாக் களித்துள்ளனர். கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏ-க்கள் மற்றும் அந்த மாநிலங்களின் விபரம் வருமாறு:  அசாம் - 22; மத்தியப் பிரதேசம் - 19; மகாராஷ்டிரா 16; உத்தரப்  பிரதேசம் - 12; குஜராத் - 10; ஜார்க்கண்ட் - 10; பீகார் - 6; சத்தீஸ்கர் - 6; ராஜஸ்தான் 5; கோவா- 4. அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில், 126 பேர் கொண்ட  சட்டப்பேரவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 79 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். ஆனால் 104 எம்எல்ஏ-க்கள் திரெளபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளனர். 2 பேர் வாக்களிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதேபோல நாடு முழுவதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 17 பேர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளனர்.