states

img

‘நல்லகண்ணு 98’ முதல்வர் - தலைவர்கள் வாழ்த்து

சென்னை, டிச. 26- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 98ஆவது அமைப்பு தினத்தையொட்டி கொடியேற்று விழாவும், மூத்த தலை வர் இரா.நல்லகண்ணு 98ஆவது பிறந்த நாள் விழா நிகழ்ச்சியும் சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சி யின் மாநிலக்குழு அலுவலகத்தில் திங்களன்று (டிச. 26) நடைபெற்றது.  கட்சிக்கொடியை இரா.நல்ல கண்ணு ஏற்றி வைத்தார். இதில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சிபிஐ மாநிலச் செயலா ளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், கே.சாமுவேல்ராஜ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  கோபண்ணா (காங்கிரஸ்), வி.ஜி.சந்தோசம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நல்லகண்ணுவுக்கு  சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். சிபிஐ அகில இந்திய பொதுச்செய லாளர் து.ராஜா, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகி யோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

ஜி.ராமகிருஷ்ணன்

பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் பேசு கையில், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்ல கண்ணுவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ  வேண்டும். அவர் நம்முடன் வாழ்வதே நமக்கு உற்சாகமளிக்கக் கூடியதுஎன்றார். தோழர்கள் நல்லகண்ணு, என்.சங்கரய்யா ஆகியோர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு அந்நியர் ஆட்சிக்கு எதிராக களம்  கண்டவர்கள். சுதந்திரப்போராட்டத் தின் போது அந்நியர் ஆட்சி அகற்றப் பட்டால் மட்டும் போதாது, நாட்டுக்கு பரிபூரண சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று  முதன்முதலில் முழக்கமிட்டது கம்யூ னிஸ்ட் இயக்கம்தான். நாடு சுதந்திரம்  அடைந்து 75 ஆண்டுகள் கடந்து விட்டன. நாட்டு மக்கள் சில பிரச்சனை களை சந்தித்தால் கூட, மோடி ஆட்சி  பொறுப்பேற்ற பிறகு மக்கள் சொல் லொண்ணா துயரத்திற்கு ஆளாகி யுள்ளனர் என்றும் அவர் கூறினார். நாடு சுதந்திரம் அடைந்த போது மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சுயசார்பு பொருளாதாரக் கொள்கை ஆகிய விழுமியங்களை உள்ளடக்கிய சிறந்த அரசியல் சட்டம்  உருவாக்கப்பட்டது. ஆனால் அப்படிப் பட்ட அரசியல் சட்ட விழுமியங்களை எல்லாம் பாஜக ஆட்சி தகர்த்து வரு கிறது. அரசியல் சட்டம் அப்படியே  இருக்கும், ஆனால் ஜனநாயகம், மதச் சார்பின்மை, கூட்டாட்சி கோட்பாடு, சுய சார்பு பொருளாதாரக் கொள்கைகள் இருக்காது. ஜெர்மனியில் எப்படி ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தாரோ, அதுபோன்ற பாசிச வடிவத்தில் இந்துத்துவா இந்தியாவில் வந்து கொண்டிருக்கிறது. வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு, இந்துத்து வாவை வீழ்த்துவதற்கு சபதமேற் போம் என்று ஜி.ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.