states

8 நாளைக்கே நிலக்கரி இருப்பு: இதுதான் மோடி ஆட்சியின் சாதனையா?

“8 ஆண்டுகளாக (பிரதமர் மோடி) பேசிய பேச்சுக்கள், ‘8 நாட்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு’ என்ற நிலைமைக்கு இந்தியாவை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். “நமது நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மின்வெட்டு காரணமாக சிறு தொழில்கள் நசுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது மேலும் வேலை இழப்புக்கு வழிவகுக்கும். எனவே, பிரதமர் மோடி அவர்களே, வெறுப்புணர்வை பரப்புவதை நிறுத்திவிட்டு, மின் உற்பத்தி நிலையங்களை திறக்கப் பாருங்கள்” என்றும் ராகுல் சுட்டிக்காட்டியுள்ளார்.