states

அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ராஞ்சி, பிப். 5 - சட்டவிரோத பணப்பரி மாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை அமலாக் கத்துறை கைதுசெய்தது. இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து சோரன் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தர விட்டு அடுத்தகட்ட விசார ணையை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.